Published : 10 Jul 2025 05:28 AM
Last Updated : 10 Jul 2025 05:28 AM

ஜெ.வின் தம்பியாக பணியாற்றியவன் நான்; அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே விமர்சிக்கிறேன் - திருமாவளவன் கருத்து

சென்னை: அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து நான் வெளி​யேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்​கிருந்​தா​லும் வாழ்​க’’ என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா என்னை வாழ்த்​தி​னார். அவருக்கு தம்​பி​யாக களத்​தில் நான் பணி​யாற்​றியது அதி​முக தலை​வர்​களுக்கு தெரி​யும். பாஜக​வால் அதி​முக​வுக்கு ஏற்​படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறி​யாமல் இருக்​கிறார்.

அதி​முக - பாஜக இடையே இணக்​க​மான உறவு ஏற்பட வேண்​டும் என நான் எங்​கே​யும் சொல்​ல​வில்​லை. அது என் ஆசை​யும் இல்லை. திரா​விட இயக்​க​மாக நாம் நம்​பிக் கொண்​டிருக்​கும் அதி​முக, பாஜக​வால் பாதிக்​கப்​பட​க் கூடாது, செல்​வாக்கை இழக்க கூடாது என்ற நல்​லெண்​ணத்தில் தான் விமர்சிக்கிறோம்.

அதி​முக வலு​வாக இருந்​தால் பாஜக​வால் காலூன்ற முடி​யாது. பாஜக காலூன்​றி​னால் விசிக​வுக்​கோ, திரு​மாவளவனுக்​கோ பாதிப்பு என்ற எண்​ணம் அல்ல. ஒட்​டு மொத்​த​மாக தமிழ் சமூகம் பாதிக்​கும் என்ற அச்​சம் இருக்​கிறது. அதி​முக மீது எனக்கு பகை உணர்ச்சியோ, வெறுப்பு உணர்ச்​சியோ இல்​லை.

பாமக, தேமு​திக ஆகியவை பாஜகவோடு இருந்​த​போது நான் பேச​வில்​லை​யே. அதி​முகவை தோழமை இயக்​க​மாக கருது​வ​தால் கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறோம். தோழமை வேண்​டாம் என அவர்​கள் கரு​தி​னால் நான் கருத்தை முன்​வைக்​கப்​ போவது இல்லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x