Published : 10 Jul 2025 04:58 AM
Last Updated : 10 Jul 2025 04:58 AM

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை - தமிழிசை குற்றச்சாட்டு

சென்னை: வல்​லக்​கோட்டை முரு​கன் கோயி​லில் நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை குற்​றம்​சாட்டி உள்​ளார். காஞ்​சிபுரம் மாவட்​டம் வல்​லக்​கோட்டை முரு​கன் கோயில் கும்​பாபிஷேக விழா​வில் பங்​கேற்க ‘‘தனக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்கு சாதிய ஒடுக்​கு​முறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்​து​விட முடி​யாது’’ என்று காங்​கிரஸ் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

மேலும், ‘‘வழி​பாட்​டுத் தீண்​டா​மையை ஒழிக்க வேண்​டும். செல்​வப்​பெருந்​தகையை சாதி அடிப்​படை​யில் தடுத்து நிறுத்​தி​னார்​களா?’’ என்​பதை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என விசிக எம்​.பி. ரவிக்​கு​மார் தெரி​வித்​திருந்​தார். மேலும், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சி​யினரும் கண்​டனம் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், வல்​லக்​கோட்டை கோயி​லில் நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை குற்​றம்​சாட்டி உள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூரில் நடை​பெற்ற கும்​பாபிஷேக விழா​வில் முரு​கனை தரிசிக்க நினைத்​தேன்.

இறை சேவகர்​களின் ஏற்​பாடு​கள், வழி​பாடு​களை​விட சேகர்​களின் கெடு​பிடி​யும், விளம்​பர​மும்​தான் அதி​க​மாக இருந்​தது. இதனால், வல்​லக்​கோட்​டை​யில் நடை​பெற்ற கும்​பாபிஷேக விழா​வில் ஒரு பக்​தை​யாக மட்​டுமே கலந்து கொண்​டேன்.

முத்​தரசர்​கள் முனகு​வதைப்​போல எந்த இருக்​கை​யும் எனக்கு அங்கு அளிக்​கப்​பட​வில்​லை. அங்​கிருந்​தவர்​களின் அனு​ம​தி பெற்​று, என்​னுடன் வந்​தவர்​களை விட்​டு​விட்​டு, நான் மட்​டும் கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு மேலே போடப்​பட்ட மேடை​யில் ஏறினேன். தாமத​மாக பதவி​களை தோளில் சுமந்து வந்த சிலர், தன்​னுடன் வந்​தவர்​களை​யும் அழைத்து கொண்டு மேலே ஏறி​னார்.

கும்​பாபிஷேகம் முடிவடைந்து சிறப்பு தரிசனத்​தைக் காண, பொது​மக்​களோடு சென்று முரு​கன் முன்​னால் அமர்ந்​தேன். ஆனால் பெரு​மைமிகு பதவி​யாளர் சிறப்பு வழியை திறக்க வேண்​டும் என்று காத்​திருந்​து, பின்​னர் சிறப்பு கதவு திறக்க சற்று தாமத​மான​தால் கோபம் கொண்டு சென்​று​விட்​டார்.

அதை சாதி​யின் வெளிப்​பாடு என்று தவறாக பிரகடனப்​படுத்​தி, பொது​மக்​கள் தரிசனத்​தை​யும் ஆணவத்​தோடு ரணப்​படுத்தி அவர் சென்​றதை சில ரவிக்​கு​மார்​கள், அதை வன்​கொடுமை என மாற்​றிப் பேசுவது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. பெண்​கள் எல்​லாம் போகும்​போது நான் போகக்​கூ​டாதா என்று பெருந்​தகை கேட்​டிருக்​கிறார். ஆக அங்கு நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை​தான்.

திருப்​ப​தி​யில் பல மணி நேரம் காத்​திருக்​கும்​போது உங்​களால் தமிழக கோயி​லில் காத்​திருக்க முடி​யா​தா, அரங்​கேறிக் கொண்​டிருக்​கும் இந்த நாடகங்​களை எல்​லாம் முரு​கன் பார்த்​துக் கொண்​டு​தான் இருக்​கிறான். பதவியை சுமந்து வந்​தவர்​கள் பழியை சுமத்தி சென்​றிருக்​கிறார்​கள். பக்​தியை சுமந்து பெரும் பக்​தி​யாளர்​களாக வந்​தால் ஆசீர்​வ​திப்​பார். பத​வியை சுமந்து ஆணவப்​ பெருந்​தகை​யாள​ராக வந்​தால்​? இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x