Published : 10 Jul 2025 04:40 AM
Last Updated : 10 Jul 2025 04:40 AM

தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை பெறும்: பழனிசாமி நம்பிக்கை

சென்னை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். கடந்த 2 நாள் பயணத்​தில் எழுச்​சி​யுடன் திரண்ட மக்​களே அதற்கு சாட்சி என்று பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: ‘மக்​களைக் காப்​போம் - தமிழகத்தை மீட்​போம்’ என்ற உயரிய லட்​சி​யத்​துடன் எனது எழுச்​சிப் பயணத்தை கோவை​யில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கினேன். இந்த பயணத்​தின்​போது மக்​கள் என்​னிடம் சொல்​லிய விஷ​யங்​கள், கவலைகள், வேதனை​கள், அவர்​கள் படும் அல்​லல்​கள், சோகங்​கள் சொல்​லொண்​ணாதவை.

உங்​களின் (முதல்​வர் ஸ்டா​லின்) காட்​டாட்​சி​யும், கொடுங்​கோல் ஆட்சி பற்​றி​யும் விவ​சா​யிகள், நெச​வாளர்​கள், குடி​யிருப்​போர் நலச் சங்​கத்​தினர், செங்​கல் சூளை உற்​பத்​தி​யாளர்​கள், நகைத் தொழில் செய்​பவர்​கள், சிறு குறு தொழில் நிறு​வனத்​தினர், பஞ்​சாலை உரிமை​யாளர்​கள் என்று பலதரப்​பட்ட மக்​கள்படும் கஷ்டங்​களை சந்​தித்​த​போது எனது நெஞ்​சம் கலங்​கியது. மனவேதனை அடைந்​தேன். ஒட்​டுமொத்த தமிழ்ச் சமூக​மும் ஆளும் உங்​கள் அரசின் மீது கடுங்​கோபத்​தில் இருக்​கின்​றன.

மின்​கட்​ட​ணம், வரி​கள் உயர்​வு, சட்​டம் ஒழுங்கு சீர்​கேடு குறித்​தெல்​லாம் என்​னிடம் சொல்​லி, இதற்​கெல்​லாம் முடி​வாக அதி​முக ஆட்​சி​தான் வரவேண்​டும் என்று எனது கரங்​களைப் பிடித்​துக் கவலைகளை தெரி​வித்​தனர். தமிழகத்​தில் இப்​போது இருக்​கும் இருண்ட காலத்தை மாற்​றி, இழந்த பொற்​காலத்தை நான் மீட்​டுத் தரு​வேன் என்று உறுதி அளித்​திருக்​கிறேன்.

திமுக அரசின் 50 மாத ஆட்​சி​யில் தமிழக மக்​களுக்கு நீங்​கள் கொடுத்த பரிசு ரூ.4 லட்​சம் கோடி கடனை அவர்​கள் தலை​யில் சுமத்​தி​யது​தான். அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை கொண்​டு​வரு​வேன் எனச் சொன்​னீர்​களே, கொண்​டு​வந்​தீர்​களா. முதி​யோர் கொலைகள், திட்​ட​மிட்ட தொடர்ச்​சி​யாக அரங்​கேறிக் கொண்டே இருக்​கின்​றன.

சிறுமிகள் முதல் வயதான பெண்​கள் வரை யாருக்​குமே பாது​காப்​பில்​லை. நாளுக்​கு​நாள் அதி​கரிக்​கும் பாலியல் குற்​றங்​கள், மாணவர்​கள் எதிர்​காலத்தை பாதிக்​கும் போதைப் பொருள் புழக்​கம், கள்​ளச்​சா​ராய மரணங்​கள், 25-க்​கும் அதி​க​மான காவல் நிலைய மரணங்​கள் என்று மக்​கள் உங்​கள் ஆட்​சி​யின் மீது வஞ்​சினம் கொண்​டிருக்​கின்​றனர்.

நீங்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வரும்​போது, மக்​கள் கோபத்தை நேரில் எதிர்​கொள்ள இயலாமல் பரித​விப்​பதை யாராலும் மாற்ற முடி​யாது. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மக்​கள் விரோத ஸ்டா​லின் ஆட்​சிக்கு முடிவு கட்​டு​வோம். அனைத்​துத் தரப்பு மக்​களின் பேராதர​வுடன் மீண்​டும் அதி​முக தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். கடந்த 2 நாட்​கள் நான் சென்ற பிரச்​சார சுற்​றுப் பயணத்​தின்​போது திரண்டு வந்த மக்​களின் எழுச்​சி​யும், அவர்​கள் கொடுத்த பேராதர​வுமே சாட்​சி. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x