Published : 09 Jul 2025 05:52 AM
Last Updated : 09 Jul 2025 05:52 AM

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஜூலை 11-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தாம்பரம் மாநகராட்சியை கண்​டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் விடுத்த அறிக்​கை: நிர்​வாகத் திறனற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான கடந்த 4 ஆண்​டு​ கால திமுக ஆட்​சி​யில், தமிழக மக்​கள் பல்​வேறு வகை​களில் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மக்​களின் அடிப்​படை மற்​றும் அத்​தி​யா​வசி​யத் தேவை​களை உடனுக்​குடன் நிறைவேற்​றித் தராமல், திமுக அரசு மக்​களை ஏமாற்றி வரு​கிறது. இதற்​கெல்​லாம் விடிவு​காலம் விரை​வில் வர உள்​ளது.

குறிப்​பாக, தாம்​பரம் மாநக​ராட்​சி, மண்​டலம் 3, அஸ்​தி​னாபுரம் பகு​திக்கு உட்​பட்ட இடங்​களில் அத்​தி​யா​வசி​யத் தேவை​கள் நிறைவேற்​றப்​ப​டாத காரணத்​தால், அப்​பகு​தி ​வாழ் மக்​கள் மிகுந்த சிரமத்​துடன் வாழ்ந்து வரு​வ​தாக, தொடர்ந்து புகார்​கள் வருகின்​றன.

அவர்​களின் நிலத்​தடி நீருக்கு ஆதா​ர​மாக விளங்கி வரும் புத்​தேரி​யில் கழிவுநீர் கலப்​ப​தால், சுற்று வட்​டாரங்​களில் நிலத்​தடி நீர் பெரு​மளவு பாதிக்​கப்​பட்​டுள்​ளதோடு, அதை பயன்​படுத்​தும் பொது​மக்​கள் தோல் வியா​தி​கள் உள்​ளிட்ட எண்​ணற்ற சுகா​தார சீர்​கேடு​களால் பெரிதும் அவதி​யுற்று வரு​கின்​றனர்.

பொது​மக்​கள் ஒன்று கூடி அகற்​றிய பின்​னரும், ஆளுங்​கட்​சி​யின் அலட்​சி​யத்​தால் நெமிலிச்​சேரி ஏரி மீண்​டும் ஆகா​யத் தாமரை கொடிகளால் சூழப்​பட்​டு, கழிவுநீர் குட்​டை​யாக மாறி​யுள்​ளது. பாதாள சாக்​கடை திட்​டப் பணி​கள் முறை​யாக மேற்​கொள்​ளாத​தால், பெரும்​பாலான இடங்​களில் அடைப்பு ஏற்​பட்டு கழிவுநீர் ஆறு​போல் சாலைகளில் வழிந்​தோடு​கிறது.

குரோம்​பேட்டை கணப​திபுரம் சுடு​காடு எவ்​வித பராமரிப்​பும் இல்​லாமல், தகன மேடை​யின் மேற்​கூரை எந்த நேரத்​தி​லும் இடிந்து விழும் அபாய நிலை​யில் உள்​ளது. அஸ்​தி​னாபுரத்​தில் நாள்​தோறும் 5 சிற்​றுந்​துகள் இயங்கி வந்த நிலை​யில், தற்​போது ஒரே ஒரு சிற்​றுந்து மட்​டுமே இயக்​கப்​படு​வ​தால் ஏழை, எளிய மக்​கள் மிகுந்த சிரமப்​படு​கின்​றனர்.

தாம்​பரம் மாநக​ராட்​சி, மண்​டலம் 3-ல் நிலவி வரும் பல்​வேறு நிர்​வாக சீர்​கேடு​களுக்​குக் காரண​மான ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக அரசு மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​களின் அடிப்​படைத் தேவை​களை உடனடி​யாக நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும், அதி​முக செங்​கல்​பட்டு மேற்கு மாவட்​டம், அஸ்​தி​னாபுரம் பகுதி சார்​பில், வரும் 11-ம் தேதி மாலை 4 மணி​யள​வில், ஜமீன் ராயப்​பேட்​டை, ஸ்ரீபட​வேட்​டம்​மன் கோயில் சந்​திப்பு அரு​கில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்.

இந்த கண்டன ஆர்ப்​பாட்​டம் அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் டி.ஜெயக்​கு​மார் தலை​மை​யிலும், செங்​கல்​பட்டு மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் சிட்​ல​பாக்​கம் ச.ராஜேந்​திரன் முன்​னிலை​யிலும் நடை​பெறும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x