Published : 09 Jul 2025 05:24 AM
Last Updated : 09 Jul 2025 05:24 AM

மருந்து ஆய்வாளர் காலி பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு

சென்னை: தமிழகத்​தில் காலி​யாக உள்ள மருந்து ஆய்​வாளர் பணி​யிடங்​களை அடுத்த வாரத்​துக்​குள் கலந்​தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மாநில மருந்து கட்​டுப்​பாட்டு இயக்கக அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​தகங்​களும், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களும் உள்​ளன. மேலும், மொத்த விற்​பனையகங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன.

அவற்​றின் செயல்​பாடு​கள், உற்​பத்தி மற்​றும் விற்​பனை செய்​யப்​படும் மருந்​துகளின் தரத்தை தொடர்ந்து ஆய்​வுக்கு உட்​படுத்​தும் பணி​யில் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். போலி மருந்​துகளோ, தரமற்ற மருந்​துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. விதி​களுக்​குப் புறம்​பாக செயல்​படும் மருந்து விற்​பனையகங்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

தற்​போது தமிழகம் முழு​வதும் 120 மருந்து ஆய்​வாளர்​கள் பணி​யில் உள்​ளனர். காலி​யாக உள்ள 18 இடங்​களை நிரப்​பக் கோரி அரசுக்கு கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது. அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் அதில் 14 பேர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்​கான பணி நிர​வல் கலந்​தாய்வு அடுத்த வாரத்​துக்​குள் நடத்​தப்​பட​வுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x