Published : 09 Jul 2025 05:09 AM
Last Updated : 09 Jul 2025 05:09 AM
சென்னை: தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை மாநில ஆளுநருக்கு அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 151(2)- வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்படி, 2023-24 நிதி ஆண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக முதன்மை தலைமை கணக்காளர் டி. ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT