Published : 08 Jul 2025 02:52 PM
Last Updated : 08 Jul 2025 02:52 PM

ஜூலை 18-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்​டும் நாடாளு​மன்​றத்​தில் பணி​கள் நடை​பெறாது என்று நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரிண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

கூட்​டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி​யுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்​போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுமார் ஒரு மாதம் நடை​பெறும் இந்த நீண்ட கூட்​டத்தொடரில் பல முக்கிய மசோ​தாக்​களை அறி​முகம் செய்ய மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ‘

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்​கைக்​கு ​பிறகு, முதல்முறை​யாக நாடாளு​மன்​றம் கூடு​வ​தால், அந்த நடவடிக்கை குறித்​தும், இந்​தி​யா - பாகிஸ்​தான் போர்நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் தலை​யீடு குறித்தும் விவாதம் நடை​பெறும் எனத் தெரி​கிறது. கூட்​டத்தொடர் தொடர்பான அனைத்​துக் கட்​சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18 காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x