Published : 08 Jul 2025 06:03 AM
Last Updated : 08 Jul 2025 06:03 AM

மாநகராட்சி தூய்மை பணி தனியார் மயத்தை கண்டித்து: ஜூலை 14-ல் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சி, வட சென்னை பகு​தி​யில், தேசிய நகர்ப்​புற வாழ்​வா​தார திட்​டத்​தின் கீழ் பணிபுரி​யும் சுமார் 2 ஆயிரம் தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களின் வாழ்வாதாரத்தை பாதிக்​கும் வகை​யில் திமுக அரசும், சென்னை மாநக​ராட்​சி​யும், தனி​யார் நிறு​வனம் ஒன்​றுக்கு தூய்​மைப் பணியை மேற்​கொள்​வதற்​கான ஒப்​பந்த ஆணையை வழங்கி உள்​ளது.

இதனால், அப்​போதைய திமுக ஆட்​சி​யில், சென்னை மாநக​ராட்​சி​யில் 2007-ம் ஆண்டு முதல் பணி​யமர்த்​தப்​பட்ட தூய்​மைப் பணியாளர்​களின் வேலை கேள்விக் குறி​யாகி உள்​ளது. மேலும், வடசென்​னை​யில் உள்ள மண்​டலங்​களில் பணிபுரி​யும் 2 ஆயிரம் பேரும், தண்​டை​யார்​பேட்டை மண்​டலத்​தில் வசித்து வரு​வ​தாக தெரி​கிறது.

சென்னை மாநக​ராட்​சி, வட சென்னை பகு​தி​யில் தூய்​மைப் பணியை தனி​யாருக்கு மாற்ற முனை​யும் திமுக அரசு மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், தற்​போது பணிபுரிந்து வரும் தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் அனை​வரும் தொடர்ந்து பணிபுரிந்​திட​வும், அவர்​களை நிரந்​தரப் பணி​யாளர்​களாக நியமனம் செய்​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்ள வலி​யுறுத்​தி​யும் வட சென்னை வடக்கு (கிழக்​கு) மாவட்ட அதி​முக சார்​பில், வரும் 14-ம் தேதி மாலை 4 மணிக்​கு, தண்​டை​யார்​பேட்டை மண்டல அலு​வல​கம் முதல் டோல்​கேட் வரை மாபெரும் மனித சங்​கிலி போராட்​டம் நடை​பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x