Published : 08 Jul 2025 05:15 AM
Last Updated : 08 Jul 2025 05:15 AM

அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

சென்னை: தமிழகத்​தில் அங்​கன்​வாடி மையங்​களின் மறுசீரமைப்பு தொடர்​பான நடவடிக்​கைகள் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ள​தாக​வும், இதனால் தமிழகத்​தில் இயங்கி வரும் அங்​கன்​வாடி மையங்​களின் எண்​ணிக்கை குறைக்​கப்​ப​டாது என அமைச்​சர் கீதா ஜீவன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திமுக அரசு 2021-ல் பொறுப்​பேற்​ற​ 4 ஆண்​டு​களில் கூடு​தலாக 44 அங்​கன்​வாடி மையங்​கள் புதி​தாக அனு​ம​திக்​கப்​பட்​டு, தற்​போது 54,483 அங்​கன்​வாடி மையங்​கள் தமிழகத்​தில் செயல்​பட்டு வரு​கின்​றன. இவை​யா​வும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​வ​தால் இந்த எண்​ணிக்கை ஒரு​போதும் குறைக்​கப்​ப​டாது. தேவைக்கு ஏற்ப கூடு​தலாக மையங்​கள் ஏற்​படுத்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இதற்​கிடையே மாநிலத்​தின் அனைத்து பகு​தி​களை​யும் ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்​சிப் பணி​கள் திட்​டத்​தின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்​ப​தற்​காக, ஏற்​கெனவே அங்​கீகரிக்​கப்​பட்ட 54,483 அங்​கன்​வாடி மையங்​களின் எண்​ணிக்​ைகபடி, தேவை​யான இடத்​துக்கு அங்​கன்​வாடிமையங்​களை இடமாற்​றம் செய்ய மத்​திய அரசு அனு​மதி அளித்​துள்​ளது.

அதனடிப்​படை​யில் புதிய பகு​தி​களில் புதிய மையங்​களை தொடங்​க​வும் புள்ளி விவரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. அதே​போல் குறை​வான பயனாளி​களை கொண்டு அரு​கருகே இயங்கி வரும் இரு அங்​கன்​வாடி மையங்​களை இணைக்​க​வும், தூரத்​தில் செயல்​படும் மையங்​களை பயனாளி​களின் வசிப்​பிடத்​துக்கு அருகேயும் மலைப்​பகு​தி​களிலும் புதி​தாக குறு மையங்​களை தொடங்க கடந்த 6 மாதங்களாக புள்ளி விவரங்​கள் சேகரிக்கப்​பட்​டன.

மறுசீரமைப்பு நடவடிக்கைக்​காக மேற்​கொள்​ளப்​பட்ட இவை​யா​வும் தமிழக அரசின் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ளன. நடை​முறைப்​படுத்​தி​னாலும் தமிழகத்​தில் தற்​போது செயல்​பட்டு வரும் 54,483 அங்​கன்​வாடி மையங்​களும் தொடர்ந்து நடத்​தப்​படும்​. இவ்வாறு கூறியுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x