Published : 08 Jul 2025 05:09 AM
Last Updated : 08 Jul 2025 05:09 AM

விளம்பர ஆசைக்காக மாணவர் விடுதிகளின் பெயர் மாற்றம் செய்வதா? - அண்ணாமலை, அன்புமணி, சீமான் கடும் விமர்சனம்

சென்னை: ‘தமிழகம் முழு​வதும் மாணவர் விடு​தி​கள் முறை​யாக பராமரிப்​பின்றி இருக்​கும் நிலை​யில், விளம்பர ஆசைக்​காக அவற்​றின் பெயரை முதல்​வர் மாற்​றி​யுள்​ளார்’ என்று எதிர்க்​கட்​சி​யினர் விமர்​சித்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் பல்​வேறு துறை​களின் கீழ் செயல்​பட்டு வரும் பள்ளி மற்​றும் கல்​லூரி விடு​தி​கள் இனி ‘சமூகநீதி விடு​தி​கள்’ என்று என்​றழைக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார். இதனை வரவேற்​றும், விமர்​சித்​தும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: தமிழகம் முழு​வதும் உள்ள மாணவர் விடு​தி​கள் முறை​யான பராமரிப்​பின்​றி, தரமான குடிநீர், சுத்​த​மான கழிப்​பறை வசதி​கள் இன்​றி, பழுதடைந்து இடிந்​து​விழும் நிலை​யில் உள்​ளன. கடந்த ஆண்​டில் கூட பழநி அருகே ஆயக்​குடி மாணவர் நல விடுதி மேற்​கூரை இடிந்து விழுந்து 5 மாணவி​கள் காயமடைந்​தனர். ஆனால் தனது விளம்பர ஆசைக்​காக விடு​தி​களின் பெயரை முதல்​வர் மாற்​றி​யுள்​ளார்.

பாமக தலை​வர் அன்​புமணி: சமூக நீதி என்ற பெயரை திமுக அரசு பயன்​படுத்​து​வதை​விட பெரிய கொடுமை இருக்க முடி​யாது. தமிழகத்​தில் சமூகநீ​தியை ஒட்​டுமொத்​த​மாக படு​கொலை செய்து விட்​டு, அதற்கு பரி​காரம் தேடும் வகை​யில் சமூகநீ​தி, சமூகநீ​தி... என்று கூறிக் கொண்​டிருக்​கிறார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: சமூக நீதி என்​றால் என்ன என்​பதை முதலில் முதல்​வர் விளக்​கி​ விட்​டு, பின்​னர் அரசு விடு​தி​களை சமூகநீதி விடு​தி​கள் என்று மாற்றி அழைக்​கட்​டும். சாதி ஒழிப்​பு, சமூக நீதி எல்​லாம் வெறும் சொல்​லாடலாக மட்​டுமே கடந்த 60 ஆண்​டு​களாக இருந்து வரு​கின்​றன. சமூக நீதி குறித்து பேசுபவர்​கள் சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​து​வ​தில் என்ன பிரச்​சினை?

பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத்: பட்​டியலின மக்​களின் அடிப்​படை வசதி​களுக்​காக மத்​திய அரசின் சார்​பில் ஒதுக்​கப்​பட்ட ரூ.1,560 கோடி நிதி​யை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மடை​மாற்​றம் செய்​தது​தான் திமுக​வின் சமூக நீதி​யா தேர்​தல் ஆதா​யத்​துக்​காக வீண் விளம்பர அரசி​யல் செய்​வதை முதல்​வர் கைவிட வேண்​டும்.

திரு​மாவளவன் வரவேற்பு: பெயர் மாற்​றம் குறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் கூறும்போது, ‘‘தமிழகம் எங்​கும் உள்ள ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யினர், பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆகிய சமூகங்​களை சார்ந்த பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்​கான விடு​தி​கள் பிசி, எஸ்​சி, எஸ்டி விடு​தி​கள் என்று அழைக்​கப்​பட்ட நிலை​யில், அவற்றை ‘சமூக நீதி விடு​தி​கள்’ என பெயர் மாற்​றம் செய்து முதல்​வர் அறி​வித்​திருப்​ப​தை மனப்​பூர்​வ​மாக வரவேற்​கிறேன்​’’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x