Published : 08 Jul 2025 04:54 AM
Last Updated : 08 Jul 2025 04:54 AM

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் தொடக்கம்

சென்னை திரு.வி.க. நகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாமுக்கான விண்ணப்பத்தை வீடு, வீடாக விநியோகிக்கும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தமிழகம் முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் ஜூலை 15-ம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், அதற்​கான விண்​ணப்ப விநி​யோகம் நேற்று தொடங்​கியது. தன்​னார்​வலர்​கள் வீடு வீடாக சென்று திட்​டம் குறித்து விளக்​கி, விண்ணப்பங்களை வழங்​கினர்.

மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் வகை​யில் தமிழகம் முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் நடத்​தப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழகத்​தின் அனைத்து நகர்ப்​புற, ஊரக பகு​தி​களி​லும் ஜூலை 15-ம் தேதி தொடங்கி நவம்​பர் மாதம் வரை இந்த முகாம் நடை​பெற உள்​ளது.

நகர்ப்​புறங்​களில் 3,768, ஊரக பகு​தி​களில் 6,232 என மொத்​தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இதில், நகர்ப்​புற பகு​தி​களில் 13 அரசுத் துறை​களின் 43 சேவை​களும், ஊரக பகு​தி​களில் 15 துறை​களின் 46 சேவை​களும் வழங்​கப்பட உள்​ளன. அத்​துடன், மருத்​துவ முகாம்​களும் நடத்​தப்பட உள்​ளன.

இது மட்​டுமின்​றி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்​டத்​துக்​கான விண்​ணப்​பம் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் மட்டுமே வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, மகளிர் உரிமை தொகை பெற தகு​தி​யுள்ள விடு​பட்ட மகளிர் இருந்தால், இந்த முகா​முக்கு சென்று விண்​ணப்​பிக்​கலாம்.

இந்​நிலை​யில், இந்த முகாம்​களில் பயன் பெறு​வதற்​கான விண்​ணப்ப படிவங்​களை வீடு வீடாக விநி​யோகம் செய்​யும் பணி தமிழகம் முழு​வதும் நேற்று தொடங்​கியது. இப்​பணி​யில் 1 லட்​சம் தன்​னார்​வலர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் வீடு வீடாக சென்​று, ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம் நடை​பெறும் நாள், இடம் குறித்த விவரங்​கள், அங்கு வழங்​கப்​படும் பல்​வேறு அரசுத் துறை​களின் திட்​டங்​கள், சேவை​கள், அதில் பயனடைவதற்​கான தகு​தி​கள், தேவைப்​படும் ஆவணங்​கள் குறித்து விளக்கி வரு​கின்​றனர்.

முகாம் தொடர்​பான தகவல் கையேடு, விண்​ணப்ப படிவங்​களை​யும் வழங்கி வரு​கின்​றனர். எம்​எல்​ஏக்​கள், வார்டு கவுன்​சிலர்​கள், ஊராட்​சிமன்ற தலை​வர்​கள் உள்​ளிட்​டோரும் சென்று படிவங்​களை வழங்கி வரு​கின்​றனர். சென்​னை​யில் 200 வார்​டு​கள் உள்ள நிலை​யில், நேற்று 6 வார்​டு​களில் முகாம் தொடர்​பான விண்​ணப்​பங்​கள், கையேடு​களை தன்​னார்​வலர்​கள் வழங்​கினர். இப்​பணியில் 2 ஆயிரம் பேர் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​. இங்​கு மொத்​தம்​ 400 மு​காம்​கள்​ நடைபெற உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x