Published : 08 Jul 2025 04:43 AM
Last Updated : 08 Jul 2025 04:43 AM

10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் 4 மணி நேரம் ஆய்வு

சென்னை: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 10 துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து 4 மணி நேரம் ஆய்வு மேற்​கொண்டு விவரங்களை கேட்​டறிந்​தார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை, திட்​டம் மற்​றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்​கள் துறை, போக்​கு​வரத்​துத் துறை, உயர்​கல்​வித் துறை, தகவல் தொழில்​நுட்​ப​வியல் மற்​றும் டிஜிட்​டல் சேவை​கள் துறை, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத் துறை, பள்​ளிக்​கல்​வித் துறை, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத் துறை, தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத்​துறை ஆகிய 10 துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து சுமார் 4 மணி நேரம் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள், தலை​மைச் செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், பொதுப்​பணித்​துறை செய​லா​ளர் மங்​கத் ராம் சர்​மா, சிறப்பு திட்ட செய​லாக்​கத் துறை செய​லா​ளர் பிரதீப் யாதவ், நிதித்​துறை செய​லா​ளர் த.உதயச்​சந்​திரன் உள்​ளிட்ட அரசு துறை செய​லா​ளர்​கள் மற்​றும் அரசு உயர் அலு​வலர்​கள் கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர்.

இக்​கூட்​டத்​தில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நிலப் பயன்​பாட்டு தகவல் அமைப்​பு, நீடித்த நிலை​யான சுரங்க கொள்​கையை உரு​வாக்​கும் பணி​கள், தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து கழகங்​களின் செயல்​பாட்​டுத் திறன், சேவை வழங்​கல் மற்​றும் நிதி நிலையை மேம்​படுத்​தும் திட்​டம், சமூக நீதி விடு​தி​களின் செயல்​பாடு​கள், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்கு அடிப்​படை கணினி அறி​வியல் மற்​றும் செயற்கை நுண்​ணறி​வுத் திறன் வளர்க்​கும் திட்​டம், அமைப்​பு​சார நலவாரி​யங்​களில் பதிவு​பெற்ற தொழிலா​ளர்​களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்​கு​வது போன்ற திட்​டங்​களை ஆய்வு செய்​தார்.

இதே​போல் ஆதி​தி​ரா​விட, பழங்​குடி​யின தொழில் முனை​வோர்​களை ஊக்​குவிக்​கும் திட்​டத்​தின் செயல்​பாடு​கள், புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட 6 மாவட்​டங்​களில் அமைக்​கப்​பட்டு வரும் மாவட்ட விளை​யாட்டு வளாகங்​கள் கட்​டு​மான பணி​கள் போன்ற பல்​வேறு துறை​களின் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்து விரி​வாக ஆய்வு மேற்​கொண்டு அதுபற்​றிய விவரங்​களை கேட்​டறிந்​தார். துறை​களின் சார்​பில் நடை​பெற்று வரும் பணி​கள் அனைத்​தை​யும் உரிய காலத்​துக்​குள் விரை​வாக முடித்​திட உயர்​ அலு​வலர்​களை அறிவுறுத்​தி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x