Published : 08 Jul 2025 12:38 AM
Last Updated : 08 Jul 2025 12:38 AM

செவிலியர் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை: தேசிய நலவாழ்வு குழுமம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக சுகா​தா​ரத் துறை​யில் காலி​யாக​வுள்ள செவிலியர்​கள், மருந்​தாளுநர்​கள், ஆய்வக நுட்​பநர்​கள்​ பணி​யிடங்​களை, மாவட்ட சுகா​தார சங்​கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்​கு​மாறு,தேசிய நலவாழ்​வுக் குழு​மம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தேசிய நலவாழ்​வுக் குழும திட்ட இயக்​குநர் மருத்​து​வர் அருண் தம்​பு​ராஜ், அனைத்து சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள், மருத்​து​வக் கல்​லூரி​களின் டீன்​களுக்கு அனுப்​பி​யுள்ள கடிதம்: சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை (டிபிஎச்), மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​ககம் (டிஎம்​எஸ்), மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) ஆகிய இயக்​குநரகங்​களில் காலி​யாக​வுள்ள செவிலியர், மருந்​தாளுநர், ஆய்வக நுட்​பநர் (3-ம் நிலை) பணி​யிடங்​களை நிரப்​புவது தொடர்​பாக, கடந்த மே 21 மற்​றும் ஜூன் 23-ம் தேதி​களில் துறை​சார் கலந்​தாய்வு கூட்​டத்தை துறை​யின் செய​லா​ளர் நடத்​தி​னார்.

முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​பட்​டன. காலி​யாக​வுள்ள பணி​யிடங்​கள் கண்​டறியப்​பட்டு அவற்றை மாவட்ட சுகா​தார சங்​கங்​கள் மூல​மாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​பது அதில் முக்​கிய​மான முடிவு ஆகும். அதற்​கேற்ப செயல்​பட்​டு, தற்​காலிக அடிப்​படை​யில் அந்த பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும். செவிலியர்​கள், மருந்​தாளுநர்​கள், ஆய்வக நுட்​பநர்​கள் (3-ம் நிலை) ஆகியோர் 11 மாத ஒப்​பந்த அடிப்​படை​யில் மட்​டுமே நியமிக்​கப்​படு​வர்என்​ப​தை​யும், இப்​பணி தற்​காலி​கமானது என்​ப​தை​யும் உறு​திபடசம்​பந்​தப்​பட்​ட​வர்​களிடம் தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதன்​படி மாவட்ட சுகா​தார சங்​கங்​கள் வாயி​லாக 2,500 செவிலியர்​கள், 1,500 மருந்​தாளுநர்​கள் மற்​றும் ஆய்வக நுட்​பநர்​கள் நியமிக்​கப்பட உள்​ளனர். இது​வரை மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) மூலம் அப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது அதற்​கான நியமன நடை​முறை​கள் மாற்​றப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x