Published : 08 Jul 2025 12:33 AM
Last Updated : 08 Jul 2025 12:33 AM

சிங்கப்பூர் தமிழ் முரசு - இந்து தமிழ் திசை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சிங்கப்பூர்: சிங்​கப்​பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மற்​றும் சென்​னையில் இருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது.

சிங்​கப்​பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 90-ம் ஆண்டு நிறைவுக் கொண்​டாட்ட நிகழ்ச்​சி, ஞாயிற்​றுக்​கிழமை (ஜூலை 6), ‘ஃபேர்​மோன்ட் சிங்​கப்​பூர்’ ஹோட்​டலில் நடை​பெற்​றது. இதில் சிங்​கப்​பூர் அதிபர் தர்​மன் சண்​முகரத்​னம் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்​டார்.

இந்த நிகழ்ச்​சி​யின் ஓர் அங்​க​மாக, தமிழ் முரசு நாளிதழை வெளி​யிடும் ‘எஸ்​பிஎச் மீடி​யா', ‘இந்து தமிழ் திசை' நாளிதழை வெளி​யிடும் ‘கேஎஸ்​எல் மீடியா' ஆகிய இரு நிறு​வனங்​களுக்​கும் இடையே ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

‘எஸ்​பிஎச் மீடி​யா' நிறு​வனத்​தின் தலைமை செயல் அதிகாரி சான் யெங் கிட், ‘கேஎஸ்​எல் மீடி​யா' நிறு​வனத்​தின் தலைமை செயல் அதிகாரி சங்​கர் வி.சுப்​ரமணி​யம் ஆகியோர் முன்​னிலை​யில், தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகரும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகனும் இந்​த ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர்.

பல்​வேறு தலைப்​புகளில் செய்தி உள்​ளடக்​கப் பரி​மாற்​றத்​துக்​கும் ஆசிய வட்​டாரத்​தில் இரு நாளிதழ்களின் வளர்ச்சி தொடர்​பாக ஒத்​துழைப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை அடை​யாளம் காண​வும் இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் வழி​வகுக்​கும். வட்​டார வாசகர்​களை எட்​டு​வதற்​கான நீடித்த, நிலைத்​தன்மை உள்ளிட்ட தேர்ந்​தெடுக்​கப்​பட்ட கருப்​பொருளின் அடிப்​படை​யில், கூட்​டாக நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​தல், இருதரப்பு ஊடகத் தளங்​கள் மூலம் இத்தகைய நிகழ்ச்​சிகளுக்கு விளம்​பரம் செய்​தல், வட்​டார உத்​தி​கள் தொடர்​பாக இருதரப்​புக்​கும் இடையி​லான திறன் பரி​மாற்​றம், இருதரப்​புக்​கும் நன்மை அளிக்​கும் எதிர்​கால திட்​டங்​கள் ஆகியவை தொடர்​பாகவும் ஒத்​துழைக்க இதன்​மூலம் ஒப்​புக்​ கொள்​ளப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x