Published : 07 Jul 2025 12:28 AM
Last Updated : 07 Jul 2025 12:28 AM

நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்

சென்னை: ஐசிஎஃப் ஆலை​யில் இந்த நிதி​யாண்​டுக்​குள் 15 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்து முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுத​விர, ஏசி மின்​சார ரயில்​கள் தயாரிப்பு பணி​யும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கி​றது.

சென்னை ஐசிஎஃப்​-ல் (இணைப்பு பெட்டி தொழிற்​சாலை) பல்​வேறு வகை​களில் 73 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. அதி​லும், தற்​போது வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்​பில் அதிக கவனம் செலுத்​தப்​படு​கிறது. தற்​போது வரை 88 வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்​துள்​ளது.

இதற்​கிடை​யில் அனைத்து தரப்பு மக்​களும் பயணிக்​கும் வகை​யில், அம்​ரித் பாரத் ரயில் (சா​தாரண வந்தே பாரத் ரயில்) தயாரிக்க முயற்சி எடுக்​கப்​பட்​டது. அதாவது நீண்ட தூர பயணத்​துக்கு பொது​வான வசதி​களு​டன் ஏசி அல்​லாத அம்​ரித் பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி 2 அம்​ரித் பாரத் ரயில்​கள் தயாரித்​து,கடந்த 2023-ம் ஆண்டு நவம்​பரில் ரயில்வே வாரி​யத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

22 பெட்​டிகளை கொண்ட இந்த ரயி​லில், ஏசி அல்​லாத இருக்கை வசதி பெட்​டிகள், தூங்​கும் வசதி கொண்ட பெட்​டிகள் ஆகியவை இணைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் தனி​யாக இன்​ஜின்​கள் இரு​புற​மும் பொருத்​தப்​பட்​டுள்​ளன. பயணி​களுக்​கான 20 பெட்​டிகளும், சரக்கு எடுத்​துச்​செல்ல 2 பெட்​டிகளும் இணைக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது நாடு முழு​வதும் 3 வழித்​தடங்​களில் இந்த ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் கிடைத்த வரவேற்பை அடுத்​து, 200-க்​கும் மேற்​பட்ட அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரிக்க ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. முதல்​கட்​ட​மாக, 50 ரயில்​களை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மேம்​படுத்​தப்​பட்ட பல்​வேறு வசதி​களு​டன் இந்த ரயில்​கள் தயாரிப்பு பணி வேக​மாக நடை​பெறுகி​றது. ஐசிஎஃப் ஆலை​யில் நடப்பு நிதி​யாண்​டுக்​குள் 15 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்து முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சென்னை ஐ.சி.எஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த ஆண்டு இது​வரை 4 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்​துள்​ளோம். நடப்பு நிதி​யாண்​டுக்​குள் 15 ரயில்​களை தயாரித்து வழங்க திட்​ட​மிட்டு இருக்​கிறோம். இந்த ரயி​லில் அவசர பிரேக்​கிங் அமைப்பு உட்பட 12 முக்​கிய வசதி​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதன்​படி, மேம்​படுத்​தப்​பட்ட இருக்கை மற்​றும் பெர்த்​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான கழிப்​பறை வசதி, மொபைல் சார்​ஜிங் வசதி, அவசர நிலை​யில் வெளியே அவசர விளக்கு வசதி உட்​பட பல்​வேறு வசதி​கள்​ ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி தீவிரம்: சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை தலா 12 பெட்டிகளை கொண்ட 6 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து, பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2025-26-ம் நிதியாண்டுக்கு மேலும் 8 ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x