Published : 05 Jul 2025 01:17 AM
Last Updated : 05 Jul 2025 01:17 AM

புதிய ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ‘ஊட்​டச்​சத்து வேளாண் இயக்​கம்’ எனும் திட்​டத்தை தொடங்​கி​ வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.103.38 கோடி​யில் 52 வேளாண் கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், வேளாண்​துறை சார்​பில் ‘ஊட்​டச்​சத்து வேளாண்மை இயக்​கம்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

ஊட்​டச்​சத்து வேளாண்மை இயக்​கத்​தின் கீழ், மக்​களின் அன்​றாட காய்​கறித் தேவை​களை நிறைவு செய்​ய​வும், வீட்​டுத் தோட்​டங்​களில் காய்​கறிகள் வளர்ப்​பதை ஊக்​குவிக்​கும் வித​மாக​வும் தக்​காளி, கத்​தரி, வெண்​டை, மிள​காய், கொத்​தவரை, கீரை வகைகள் போன்ற காய்​கறி விதைகள் அடங்​கிய 15 லட்​சம் காய்​கறி விதைத் தொகுப்​பு​களை​யும், விரை​வில் பலனளிக்​கும் பப்​பாளி, கொய்​யா, எலுமிச்சை ஆகிய பழச்​செடிகள் அடங்​கிய 9 லட்​சம் பழச்​செடி தொகுப்​பு​கள் மற்​றும் புரதச்​சத்து நிறைந்த மரத்​து​வரை, காராமணி உள்​ளிட்ட பயறு வகைகள் அடங்​கிய ஒரு லட்​சம் பயறு வகை விதைத் தொகுப்​பு​கள் ஆகிய​வற்​றை​யும் விவ​சா​யிகளுக்கு வழங்​கும் வகை​யில், தலா 5 பயனாளி​களுக்கு வழங்​கி​னார்.

மேலும், ரூ.103.38 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள 2 முதன்மை பதப்​படுத்​தும் மையங்​கள், 18 சேமிப்​புக் கிடங்​கு​கள், 3 வேளாண் ஒழுங்​கு​முறை விற்​பனைக் கூடங்​கள், 3 வேளாண் சந்தை நுண்​ணறிவு ஆலோ​சனை மையங்​கள், 8 ஒருங்​கிணைந்த வேளாண் விரி​வாக்க மையங்​கள், 10 துணை வேளாண் விரி​வாக்க மையங்​கள், 2 விதை சேமிப்​புக் கிடங்​கு​கள், உயி​ரியல் கட்​டுப்​பாட்டு ஆய்​வகம், 2 ஒருங்​கிணைந்த விதைச்​சான்று வளாகங்​கள், அலு​வல​க கட்​டிடம், மாணவர் விடுதி மற்​றும் தரக்​கட்​டுப்​பாடு, பகுப்​பாய்​வகம் உள்​ளிட்ட 52 கட்​டிடங்​களை​யும் முதல்​வர் திறந்து வைத்​தார்.

கால்​நடை பராமரிப்பு: அதைத்​தொடர்ந்​து, கால்​நடை பராமரிப்​புத்​துறை சார்​பில், ரூ.25.15 கோடி செல​வில் ஒரு கால்​நடை நோய் புல​னாய்​வுப் பிரிவு, ஒரு கால்​நடை மருத்​து​வ​மனை, 12 கால்​நடை மருந்​தகம், 2 மாவட்ட கால்​நடை பண்​ணை​கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரி​வாக்க மையம் ஆகிய​வற்​றுக்​கான கட்​டிடங்​களையும் திறந்து வைத்​தார்.

கருணை பணி: மேலும், பணிக்​காலத்​தில் உயி​ரிழந்த பணி​யாளர்​களின் 208 வாரிசு​தா​ரர்​களுக்கு கருணை அடிப்​படை​யில் கால்​நடை பராமரிப்பு உதவி​யாளர், ஊர்தி ஓட்​டுநர் மற்​றும் தூய்​மைப் பணி​யாளர் பணி​யிடத்​துக்​கான பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், மு.பெ.​சாமி​நாதன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், துறை​களின் செயலர்​கள் தட்​சிணா​மூர்த்​தி, சுப்​பையன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x