Last Updated : 04 Jul, 2025 08:22 AM

 

Published : 04 Jul 2025 08:22 AM
Last Updated : 04 Jul 2025 08:22 AM

‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்!’ - அமித் ஷா இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார்.

2024 மக்​கள​வைத் தேர்​தலின் போது அதி​முக கூட்​ட​ணிக்கு பாஜக பகீரத பிர​யத்​தனம் செய்​தது. ஆனால் அண்​ணா​மலை​யின் அதிரடிகளால் அதிருப்தி கொண்ட இபிஎஸ், “பாஜக-வுடன் இனி எந்​தக் காலத்​தி​லும் கூட்​டணி இல்​லை” என திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​தார். அதி​முக-​வின் இந்த முடி​வால் உதிரிக் கட்​சிகளை கூட்டு சேர்த்​துக் கொண்டு தேர்​தலைச் சந்​தித்த பாஜக-வுக்கு ஓர் இடம் கூட கிடைக்​க​வில்​லை. இதனால் இபிஎஸ் மீதும் அதி​முக மீதும் கடும் கோபத்​தில் இருந்​தார் அமித் ஷா.

மக்​கள​வைத் தேர்​தலைப் போலவே சட்​டமன்​றத் தேர்​தலிலும் கோட்​டை​விட்டு விடக்​கூ​டாது என சுதா​ரித்த அவர், ‘உரிய முறை​யில்’ காரி​யத்​தில் இறங்​கி​னார். இதற்​காக செங்​கோட்​டையன் என்ற ஆயுதத்தை அவர் கையிலெடுத்​தார். ரெய்​டு​களும் ஆரம்​ப​மாகின. இரட்டை இலை வழக்​கும் தூசிதட்​டப்​பட்​டது.

இந்த மூவ்​களை எல்​லாம் பார்த்​து​விட்டு தனது முடிவை மாற்​றிக் கொண்ட இபிஎஸ், டெல்​லிக்கே போய் அமித் ஷாவை சந்​தித்​துப் பேசி பாஜக கூட்​ட​ணிக்கு அச்​சா​ரம் போட்​டார். இதைத் தொடர்ந்து சென்​னைக்கு வந்து அதி​முக உடனான கூட்​ட​ணியை அதி​காரபூர்​வ​மாக அறி​வித்​தார் அமித் ஷா. கூட்​டணி உறு​தி​யா​னாலும் கூட்​டணி ஆட்​சியா கூட்​ட​ணி​யின் ஆட்​சியா என்​ப​தில் இரண்டு கட்​சிகளும் மாறி மாறி கண்​ணா​மூச்சி ஆட்​டம் ஆடிக்​கொண்​டிருக்​கின்​றன.

எப்​படி​யா​வது தமி​ழ​கத்​தில் கூட்​டணி அமைச்​சர​வை​யில் இடம்​பிடித்து விட வேண்​டும் என்​ப​தில் தீர்​மான​மாக இருக்​கிறது பாஜக. “அதெல்​லாம் முடி​யாது அதி​முக தனித்தே ஆட்சி அமைக்​கும்” என்​கி​றார் இபிஎஸ். இந்த வாதத்​தால் இப்​போது இபிஎஸ் மீது மீண்​டும் அதிருப்தி கொண்​டிருக்​கும் அமித் ஷா, அடுத்த விளை​யாட்டை ஆரம்​பித்​திருக்​கி​றார்.

பாஜக-வுக்கு அமைச்​சர​வை​யில் இடமளிக்​கா​விட்​டால் நீங்​கள் முதல்​வர் ஆக முடி​யாது என்று இபிஎஸ்ஸை எச்​சரிக்​கும் வித​மாகவே, “அதி​முக-வைச் சேர்ந்த ஒரு​வர் முதலமைச்​ச​ராக வரு​வார்” என்ற வார்த்​தைகளை அமித் ஷா பயன்​படுத்​தி​யுள்​ளார் என்​கி​றார்​கள். இபிஎஸ் தொடர்ந்து முரண்டு பிடித்​தால் மகா​ராஷ்டிரா பாணி​யில் செங்​கோட்​டையன் அல்​லது எஸ்​.பி.வேலுமணி போன்ற ஒரு​வரை முதல்​வ​ராக்​க​வும் தயங்க மாட்​டோம் என்​பது தான் அமித் ஷா தந்​திருக்​கும் சமிக்ஞை என்​கி​றார்​கள்.

அமித் ஷா இப்​படிச் சொன்ன பிறகு, “தேர்​தலுக்​குப் பிறகு நடப்​பவற்றை அமித் ஷாவும் எடப்​பாடி பழனி​சாமி​யும் முடிவு செய்​வார்​கள்” என்று தமி​ழிசை போன்​றவர்​களும் பேச ஆரம்​பித்​திருக்கிறார்​கள். இபிஎஸ் தான் முதல்​வர் வேட்​பாளர் என்று தமிழக பாஜக தலை​வர்​கள் இப்​போது வெளிப்​படை​யாகப் பேசத் தயங்​கு​கி​றார்​கள். ஆக, தங்​களின் வார்த்​தைக்​குக் கட்​டுப்​ப​டா​விட்​டால் எதை​யும் செய்​யத் தயங்​க​மாட்​டோம் என்று இபிஎஸ்​ஸுக்கு பாஜக-​வினர் குறிப்​பால் உணர்த்த ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலை​வர் நாராயணன் திருப்​ப​தி​யிடம் கேட்​டதற்​கு, “இன்​னொரு கட்சி விவ​காரத்​தில் தலை​யிட மாட்​டோம் என்று அதே பேட்​டி​யில் அமித் ஷா ஜி தெளி​வாக கூறி​யுள்​ளார். அப்​படி இருக்​கை​யில், அந்​தக் கட்​சி​யில் யார் முதல்​வர் என்​பதை அவர் சொல்ல இயலாது என்​ப​தால் தான் அதி​முக-வைச் சேர்ந்​தவர் முதல்​வர் என்று பொது​வாக சொல்​லி​யிருக்​கி​றார்.

பாஜக-வைச் சேர்ந்​தவர் முதல்​வ​ரா​வார் என்று அவர் சொல்​லி​யிருந்​தால் அது குறித்து கேள்வி கேட்​கலாம். அதை விட்​டு​விட்டு தெளி​வாக, எவ்​வித சந்​தேகங்​களுக்​கும் இடமில்​லாமல் பேசி​யிருக்​கும் அவரது பேச்​சுக்கு கண், காது, மூக்கு வைத்து கேள்வி கேட்​டால் அதற்​கெல்​லாம் எங்​களிடம் பதில் இல்​லை” என்​றார்.

இன்​னும் 10 மாதத்​துக்​குள் அதி​முக - பாஜக கூட்​ட​ணியை வைத்து என்​னென்ன சர்ச்​சைகள் வெடிக்​கப் போகிறதோ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x