Published : 04 Jul 2025 01:42 AM
Last Updated : 04 Jul 2025 01:42 AM

கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்: பாஜக தலைவர்கள் பங்கேற்க அதிமுக அழைப்பு

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, அனைத்து தொகு​தி​களி​லும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ள​தாக பழனி​சாமி அறி​வித்​திருந்​தார். பல்​வேறு காரணங்​களால் சுற்​றுப்​பயணம் தள்​ளிப்​போனது. இந்​நிலை​யில் `மக்​களை காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்' என்ற தொடர் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை​யில் தொடங்​கு​வ​தாக பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்​கட்ட சுற்​றுப் பயணத்​தில் கோவை, விழுப்​புரம், கடலூர்,தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​களில் வரும் 21-ம் தேதி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள இருக்​கிறார். முதல் நாளான ஜூலை 7-ம் தேதி கோவை மேட்​டுப்​பாளை​யம் தொகு​தி​யில் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார். அன்று கவுண்​டம்​பாளை​யம் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். 5 இடங்​களில் பழனி​சாமி பேச, கோவை மாவட்ட அதி​முக நிர்​வாகி​கள் ஏற்​பாடு​களைச் செய்து வரு​கின்​றனர்.

மேலும், சுற்​றுப்​பயணம் செல்​லும் இடங்​களில் தொழில்​முனை​வோர் மற்​றும் தொழிலா​ளர்​களைச் சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்​டறிந்​து, அதி​முக ஆட்சி அமைந்​தால் அதற்​கான தீர்வு​கள் கிடைக்​கும் என பழனிசாமி உறு​தி​யளிக்க இருப்​ப​தாக​வும் அதி​முக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இணக்கமான சூழலை ஏற்படுத்த... அதேபோல், அதி​முக-​பாஜக தொண்​டர்​களிடையே இணக்​க​மான சூழலை ஏற்​படுத்​தும் நோக்​கில், பழனி​சாமி தொடங்​கும் சுற்​றுப்​பயண தொடக்க நிகழ்ச்​சி​யில் பாஜக​வின் முக்​கி​யத் தலை​வர்​களை அழைக்​க​வும் பழனி​சாமி முடிவு செய்​துள்​ளார்.

அதன்​படி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், முன்​னாள் தலை​வர்​கள் பொன்​.​ரா​தாகிருஷ்ணன், தமிழிசை சவுந்​தர​ராஜன், அண்​ணா​மலை மற்​றும் ஹெச்​.​ராஜா, வானதி சீனி​வாசன் எம்​எல்ஏ உள்​ளிட்​டோரை பழனி​சாமி தரப்​பினர் அழைத்​த​தாக​வும், நயி​னார் நாகேந்​திரன் பங்​கேற்​ப​தாக உறு​தி​யளித்​த​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அதே​நேரத்​தில், பாஜக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் தமாகா உள்​ளிட்ட கூட்​டணி கட்​சித்தலை​வர்​களுக்​கு, அதி​முக​விடம் இருந்து இது​வரை அழைப்பு வரவில்லை என கூறப்​படு​கிறது. பழனி​சாமி சுற்​றுப்​பயணத்​தின்​போது பொது​மக்​கள் மற்​றும் கட்​சித் தொண்​டர்​கள் அதிக அளவில் கூடு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​வ​தால், அவர்​களை ஒழுங்​குபடுத்​த​வும், அவரது சுற்​றுப்​பயணத்தை பாது​காப்​பாக நடத்​த​வும் உரிய போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் என தமிழக டிஜிபி சங்​கர் ஜிவாலிடம் அதிமுக சார்பில்​ நேற்​று மனு அளிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x