Published : 04 Jul 2025 01:28 AM
Last Updated : 04 Jul 2025 01:28 AM

திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்​கின்​றன: பெ.சண்முகம் விமர்சனம்

மதுரை: மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் காவல் துறை​யினரின் அத்​து​மீறல்​கள் தொடர்​கின்​றன. அதி​முக ஆட்​சி​யில் ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச் சூட்​டில் தொடர்​புடைய யாரும் இது​வரை தண்​டிக்​கப்​பட​வில்​லை. திமுக ஆட்​சி​யிலும் காவல் துறை அத்​து​மீறல்​கள், மனித உரிமை மீறல்​கள், காட்​டுமி​ராண்​டித்​தன​மான தாக்​குதல்​கள் தொடர்​கின்​றன. காவல் நிலைய உயி​ரிழப்​பு​கள் தொடர்​பாக தமிழக அரசு விசா​ரித்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

திமுக ஆட்​சி​யில் 24 காவல் நிலைய இறப்​பு​கள் நடந்​துள்​ளன. தலை​மைச் செயல​கத்​திலிருந்து யாரோ ஒரு​வர் கொடுத்த அழுத்​தத்​தில்​தான் அஜித்​கு​மார் கொலைச் சம்​பவம் நடந்​துள்​ளது என்று எல்​லோரும் பேசுகின்​றனர். ஆனால், யார் அந்த ஐஏஎஸ் அதி​காரி என வெளிப்​படை​யாக அறிவிக்​க​வில்​லை, மூடிமறைக்​கப் பார்க்​கி்ன்​றனர். யார் அந்த அதி​காரி என்​பதை வெளிப்​படை​யாக அறிவிக்க வேண்​டும். நிகி​தா​வும், அவரது தாயாரும் யாருடைய காரில் கோயிலுக்கு வந்​தார்​கள் என்ற விவரத்​தை​யும் வெளி​யிட வேண்​டும்.

சிபிஐ​யிடம் வழக்கை ஒப்​படைத்து விட்​ட​தால், இனி நமக்​குப் பொறுப்​பில்லை என தமிழக முதல்​வர் தட்​டிக்​கழிக்​கக் கூடாது. இனிமேல் இது​போன்ற சம்​பவங்​கள் நிகழாமல் தடுக்க வேண்​டும். தமிழகம் முழு​வதும் தனிப்​படைகள் கலைக்​கப்​படு​வ​தாக டிஜிபி அறி​வித்​துள்​ளார். இதன்மூலம் எஸ்​.பி. டிஎஸ்பி ஆகியோர் தனிப்​படை என்ற ரவுடி கும்​பலை வைத்து செயல்​பட்​டுள்​ளனர் என்​பது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. காவல் துறை அதி​காரி​கள் மனித உரிமை​களை மதிப்​ப​தில்​லை. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தலை​யிட்ட பின்​பு​தான் இந்த வழக்கு வேகம் எடுத்​துள்​ளது.

இக்​கொலை​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் யாராக இருந்​தா​லும், குற்​ற​வாளி கூண்​டில் நிறுத்​த வேண்​டும். சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு முழு​மை​யாக ஒத்​துழைக்க வேண்​டும். சாட்சிகளுக்கு உரிய பாது​காப்பு அளிக்கவேண்​டும். அஜித்​கு​மார் குடும்​பத்​தினருக்கு ரூ.50 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x