Published : 04 Jul 2025 01:23 AM
Last Updated : 04 Jul 2025 01:23 AM

அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்: ராமதாஸ் திட்டவட்டம்

விழுப்புரம்: அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​ககளிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் ஆங்​கில மொழிப் புலமையை வளர்த்​தெடுக்க ‘level up’ என்ற திட்​டத்தை அரசு செயல்​படுத்​தி​யுள்​ளதை வரவேற்​கிறோம். இத்​திட்​டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை விரிவுப்​படுத்த வேண்​டும்.

சின்​னக்​காமன்​பட்டி பட்​டாசு ஆலை விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 9-ஆக உயர்ந்​துள்​ளது. எனவே, பட்​டாசு ஆலைகளுக்கு அனு​மதி வழங்​கும்​போது கடுமை​யான விதி​களைப் பின்​பற்ற வேண்​டும். இந்த விவ​காரத்​தில் இழப்​பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்​களை விருதுநகர் எஸ்​.பி. கண்​ணன் எச்​சரித்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது. திருப்​புவனத்​தில் போலீ​ஸா​ரால் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மார் குடும்​பத்​தினருக்கு ரூ.1 கோடி இழப்​பீடு வழங்க வேண்​டும். இந்த சம்​பவத்​துக்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பாமக எம்​எல்ஏ அருளை கட்​சி​யில் இருந்து நீக்​கும் அதி​காரம் அன்​புமணிக்கு இல்​லை. நிறு​வனர், தலை​வ​ரான எனக்கு மட்​டும்​தான் உள்​ளது. அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்​பட்​டுள்​ளேன். கூட்டணி தொடர்​பாக திமுக, அதிமுக​வுடன் கூட்​டணி பாமக பேச்சு​வார்த்தை நடத்​துகிறது என்​பது வதந்​தி​யாகும். வன்​னியர் சங்​கம் சார்​பில் பூம்பு​காரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடை​பெறும் மகளிர் மாநாட்​டில் அனைத்து கட்​சிகளைச் சேர்ந்த மகளிரும் கலந்​து​கொள்​ளலாம். மக்​களைப் பாதிக்​கும் ரயில் கட்ட​ணத்தை உயர்த்​தக் கூடாது. இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x