Published : 03 Jul 2025 09:15 AM
Last Updated : 03 Jul 2025 09:15 AM

“என் தலைவர் அன்புமணியை சிலர் மெஸ்மரிசம் செய்து வைத்திருக்கிறார்கள்!” - பாமக எம்எல்ஏ இரா.அருள் ஆதங்கம்

“கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமை குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்” என்று சொல்லி சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வான இரா.அருளை கட்சியிலிருந்து அதிரடியாய் நீக்கி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதனைத் தொடர்ந்து அருளிடம் பேசினோம்.

பாமக-வில் பிரச்சினை வெடித்து பல வாரங்கள் கடந்த பிறகு திடீரென ராமதாஸுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது ஏன்?

பாமக-வை உருவாக்கியவர் மருத்துவர் அய்யா. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களால் மதிக்கப்பட்ட தலைவர் அய்யா. அவர் குழந்தையாகவும், கைப்பாவையாகவும் மாறிவிட்டார் என்று கூறுவதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த வேதனையால், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். ஆனால், தலைவர் உட்பட யாரைப் பற்றியும் நான் தவறாகப் பேசவில்லை.

பாமக-​வின் எதிர்​காலம் அன்​புமணி என்ற நிலை இருக்​கும்​போது அவரை விமர்சித்து​விட்டு அந்த கட்​சி​யில் நெருடல் இல்​லாமல் தொடர முடி​யும் என நினைத்​தீர்​களா?

தொடர முடி​யாது என்ற சூழல் கட்​டா​யம் ஏற்​ப​டாது. ஏனெனில், தலை​வர் அன்​புமணிக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகையி​லான எந்த கருத்​தை​யும் நான் கூற​வில்​லை. மேலும், என்​றைக்​கும் அண்​ணன் அன்​புமணி தான் என் தலை​வர்.

செல்​வகணபதி எம்பி மூலம் நீங்​கள் திமுக-​வில் இணைய பேச்​சு​வார்த்தை நடத்​தி​விட்​டீர்​கள் அதனால் தான் இவ்​வாறு பேசுகிறீர்​கள் என்கிறார்களே..?

முன்பு நேரு மூலம் என்​றார்​கள். பின்​னர் எ.வ.வேலு மூலம் என்​றார்​கள். இப்​போது செல்​வகணபதி என்​கி​றார்​கள். அரசி​யல் நாகரி​கத்​துடன் தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​களிடம் நான் பழகு​வதை இப்​படி எடுத்​துக்​கொள்​வ​தா? என் தொகு​தி​யில் வசிக்​கும் முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி​யுட​னும் தான் எனக்கு நீண்​ட​கால நட்​பு. அதனால் நான் அதி​முக-வுக்​குச் செல்ல இருப்​ப​தாகக்​கூட கூறுகி​றார்​கள். யார் என்ன சொன்​னாலும் அருளின் மூச்சு என்றோ ஒரு​நாள் நிற்​கும்​போது என் உடல் மீது பாமக கொடி தான் போர்த்​தப்பட வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறேன்.

பாமக-​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு திமுக தான் காரணம் என்​பது உண்​மை​யா?

இதற்​கான பதிலை மருத்​து​வர் அய்யா ஏற்​கெனவே தெரி​வித்து விட்​டார்.

சுயமரியாதை கொள்கை கொண்ட பாமக-வில் இருந்துகொண்டு சுயநலத்துக்காக, பார்ப்பவர் காலில் எல்லாம் நீங்கள் விழுந்து வணங்குவதாக கூறப்படுவது பற்றி?

மூத்​தவர்​களை வணங்க வேண்​டும் என்​பதை ஆசிரியர்​களான என் பெற்​றோர் சிறு​வயது முதலே எனக்கு வலி​யுறுத்தி வளர்த்​தனர். மூத்​தோரை வணங்​குதல் நம் மண்​ணின் உயர்ந்த பண்​பாடு​களில் ஒன்​று. இதில் சுயநல​மும் இல்​லை, சுய மரி​யாதைக்கு பாதிப்​பும் இல்​லை. என்னை விட வயதில் இளை​ய​வர்​கள் யார் காலிலும் நான் விழ​வில்​லை.

உங்​களது ஊடக பேட்​டிகள் சுய விளம்​பரத்​துக்​கானவை என்​கி​றார்​களே?

சாதாரண நிலை​யில் இருந்த என்னை எம்​எல்​ஏ-​வாக ஆக்​கியது பாமக தான். என் தொகுதி மக்​களுக்​கும், மாவட்ட மக்​களுக்​கும் இன்​றைய தேதி​யில் நான் ஒரு பரிச்​சய​மான முகம் தான். இதற்கு மேல் என்ன விளம்​பரம் எனக்கு தேவை​யுள்​ளது? என் கட்​சி​யின் தலை​வரை குறை​கூறி விளம்​பரம் தேடிக்​கொள்​ளும் கீழ்​நிலை எண்​ணம் எனக்கு இல்​லை.

ராம​தாஸை சுற்​றி​யுள்ள சில சதி​காரர்​கள் தான் கட்​சி​யில் நடக்​கும் இத்​தனை பிரச்​சினை​களுக்​கும் காரணம் என்று அன்​புமணி தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் கூறுகி​றார்​களே?

அரை நூற்​றாண்​டைக் கடந்து அரசி​யலில் உள்ள தலை​வர் மருத்​து​வர் அய்​யா. யாரோ சொல்​வதைக் கேட்​டு, சிந்​திக்​காமல் செயல்​படும் வகை தலை​வர் அல்ல அவர். கட்​சி​யில் பிரச்​சினை கிளம்​பியதும், “சில நாட்​களுக்கு யாரும் என்னை பார்க்க வரவேண்​டாம்” என்று கூறி​விட்டு அன்​புமணி பனையூரில் தங்​கி​யிருந்​தார்.
அதை​யும் மீறி சில சதி​காரர்​கள் நேரில் அவரை சந்​தித்து துர்​போதனை செய்​த​தால் தான் பிரச்​சினை பூதாகர​மாகி விட்​டது. மருத்​து​வர் அய்​யா​வால் அடை​யாளம் காணப்​பட்டு துரத்​தப்​பட்​ட​வர்​கள் இந்த சதி​காரர்​கள்.

பிரச்​சினை எப்​போது முடி​யும்​... இதற்கு எது தான் நிவாரணி?

என் தலை​வர் அன்​புமணி தற்​போது பதற்​ற​மான மனநிலை​யில் உள்​ளார். சிலர் அவரை மெஸ்​மரிசம் செய்து பதற்​றத்தை மேலும் கூட்டி அவரை உச்​சகட்ட மனஉளைச்​சலுக்கு உள்​ளாக்​கு​கின்​ற​னர். 108 ஆம்​புலன்​ஸ், சுகா​தார திட்​டங்​கள் போன்ற மக்​கள் நல திட்​டங்​களைக் கொடுத்த தலை​வர் அன்​புமணி நிச்​ச​யம் நாட்​டுக்​குத் தேவை. தலை​வர் ஒரு​வார காலம் கட்​சி​யினர் யாரை​யும் சந்​திக்காமல், செல்​போனை​யும் அணைத்து வைத்து ஏகாந்த நிலை​யில் இருந்​து​விட்டு நேராக தைலாபுரம் சென்று மருத்​து​வர் அய்​யாவை சந்​தித்து புதிய சிந்​தனை​களோடு 1 மணி நேரம் பேசி​னாலே அனைத்து பிரச்​சினை​களும் சரி​யாகி விடும்.

கட்​சி​யில் இருந்து உங்​களை அன்​புமணி நீக்கி இருப்​பது பற்​றி..?

கட்​சி​யின் நிறு​வனரும், தலை​வ​ரும் மருத்​து​வர் அய்யா தான். அவர் தான் எனக்கு கட்​சி​யில் பொறுப்பு வழங்​கிய​வர். சின்ன அய்யா கட்​சி​யின் செயல் தலை​வர் தான். அவரால் என்னை உட்பட யாரை​யும் பொறுப்​பில் இருந்து நீக்க முடி​யாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x