Published : 03 Jul 2025 05:51 AM
Last Updated : 03 Jul 2025 05:51 AM

ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டிவிட்டது கீதா ஜீவன்: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

கோவில்பட்டி: மகாகவி பார​தி​யார் பிறந்த இல்​லத்தை புதுப்​பிக்​காத தமிழக அரசை கண்​டித்து எட்​டயபுரத்​தில் அதி​முக சார்​பில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.

வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான கடம்​பூர் செ.​ராஜூ எம்​எல்ஏ தலைமை வகித்து பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ஒரே ஒரு சம்​பவம் சாத்​தான்​குளத்​தில் நடந்​தது. அது தவறு​தான். அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டு, அதில் குற்​றச்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் இன்று வரை வெளி வர முடி​யாத நிலை உள்​ளது. ஆனால், இந்த ஆட்​சி​யில் இது​வரை 25 சம்​பவங்​கள் நடந்​துள்​ளன.

ஸ்டெர்​லைட் போராட்​டத்​துக்கு இன்​றைக்கு அமைச்​ச​ராக உள்ள கீதாஜீவன்​தான் காரணம். அந்தப் போராட்​டத்தை தூண்​டி​விட்​டது யார்? போராட்​டத்தை தொடங்கி வைத்த தலை​வர்​கள் எங்கே போனார்​கள்? அவர்​கள் பாதிக்​கப்​பட்​டார்​களா? அப்​பாவி​கள் 13 பேர் உயி​ரிழந்​தனர்.

பத்​திரி​கை​யாளர்​கள், ஊடகங்​கள் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்​லை. திமுக அரசின் தவறுகளை சுட்​டிக்​காட்​டக் கூடாது என்ற நிலைப்​பாட்​டில் இந்த அரசு உள்​ளது. அண்ணா பல்​கலைக்​கழக விவ​காரத்தை மூடி மறைக்​கப் பார்த்​தார்​கள். நீதி​மன்​றம் தலை​யிட்ட பின்​னர் ஞான​சேகரன் கைது செய்​யப்​பட்​டார். அதில், யார் அந்த சார்? என்ற விவ​காரத்​துக்கு ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதும் பதில் கிடைக்​கும். இந்த ஆட்​சியே இவர்​களின் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. தறிகெட்டு ஓடு​கிறது. இவ்​வாறு அவர் தெரி்வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x