Published : 03 Jul 2025 05:10 AM
Last Updated : 03 Jul 2025 05:10 AM

திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன்: வைகோ உறுதி

சென்னை: ​தி​முக அரசுக்கு எதி​ராக விமர்​சனம் செய்ய மாட்​டேன் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ திட்​ட​ வட்​ட​மாக தெரிவித்​தார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில் முதல்​வரும் கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்டாலினை மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று சந்​தித்து பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை மரி​யாதை நிமித்​த​மாகத்​தான் சந்​தித்​தேன். மதி​முக​வில் நடை​பெற்று வரும் செயல் வீரர்​கள் கூட்​டம் தொடர்​பாக அவரிடம் தெரி​வித்​தேன். இந்த திமுக அரசுக்கு எதி​ராக எந்த பிரச்​சினை​யிலும் ஒரு வார்த்தை கூட நான் விமர்​சன​மாக வைத்​த​தில்​லை, வைக்​க​வும் மாட்​டேன்.

திமுக​வுக்​குப் பக்​கபல​மாக இருப்​பேன் என முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் இறுதி மூச்​சுக்​குச் சில நாட்​களுக்கு முன்பு அவரிடம் கூறினேன். அதை நேற்று முன்​தினம் கூட மேடை​யில் பேசி​யிருந்​தேன் என முதல்​வரிடம் தெரி​வித்​தேன். இந்​துத்​துவ சனாதன சக்​தி​கள், திரா​விட கொள்​கைகளைத் தகர்க்​கலாம் என நினைத்​தால், இமயமலை​யைக் கூட அசைக்​கலாம் திரா​விட இயக்​கத்தை ஒன்​றும் செய்ய முடி​யாது.

வாஜ்​பாய், அத்​வானி ஆகியோர் என்னை மத்​திய அமைச்​ச​ராக்​கு​கிறோம் என்று சொன்​ன​போது, நான் முடி​யாது என்று சொன்​னேன். என்னை பொறுத்​த வரை கொள்கை என்​றால் அதில் உறு​தி​யாக இருப்​பேன். வரும் தேர்​தலில் திமுக தனிப்​பெரும்​பான்​மை​யாக வென்று ஆட்​சி​யைப் பிடிக்​கும்.

கூட்​டணி கட்​சிகளின் எம்​எல்​ஏ-க்​கள் ஓட்டு இல்​லாமல் திமுக எம்​எல்​ஏ-க்​களே ஓட்டு போட்டு முதல்​வரை தேர்ந்​தெடுக்​கும் வகை​யில் வெற்றி பெறும். கூட்​டணி ஆட்சி என்​பது எங்​களின் நோக்​கம் அல்ல. கூட்​டணி ஆட்​சியை தமிழக மக்​கள் ஏற்​றுக்​கொள்ள மாட்டார்கள். எங்​களின் கூட்​டணி மாபெரும் வெற்​றி பெறும்​ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x