Published : 03 Jul 2025 04:57 AM
Last Updated : 03 Jul 2025 04:57 AM

டிஜிட்டல் பரிவர்த்தனையில் தவறான வழிகாட்டுதல்கள்: டாஸ்மாக் அதிகாரிகள் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: டிஜிட்டல் பரிவர்த்​தனை​யில் தவறான வழி​காட்​டு​தல்​களை டாஸ்​மாக் அதி​காரி​கள் வழங்​கு​வ​தாக​வும், இதனால் முன்பை விட வேலைப்​பளு அதி​கரித்​துள்​ள​தாக​வும் டாஸ்​மாக் ஊழியர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். தமிழகம் முழு​வதும் 4,829 டாஸ்​மாக் கடைகள் உள்​ளன. அனைத்து டாஸ்​மாக் கடைகளை​யும் டிஜிட்​டல் மயமாக்​கும் பணி​கள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

குறிப்​பாக, மது​பானங்​களுக்கு டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்தி வாங்​கும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த திட்டத்தை தொடங்​கும் போது, டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்தி மது​பாட்​டில்​கள் வாங்​கு​வோருக்கு அதற்​கான ரசீது வழங்​கப்​படும் எனவும், இதன் மூலம் வெளிப்​படைத் தன்மை அதி​கரிக்​கும், முறை​கேடு​கள் குறை​யும் என தெரிவிக்​கப்​பட்​டது.

ஆனால், எந்த டாஸ்​மாக் கடைகளி​லும் மது​பாட்​டில் வாங்​கியதற்​கான ரசீது குடிமகன்​களுக்கு வழங்​கப்​படு​வ​தில்லை என்ற குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. அனைத்து கடைகளுக்​கும் டாஸ்​மாக் நிர்​வாகம் சார்​பில், மது​பாட்​டில்​களை ஸ்கேன் செய்​து, விற்​பனை செய்​வதற்​காக செல்​போன் வடிவி​லான கையடக்க கருவி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

பெரும்​பாலான கடைகளில், குடிமகன்​கள் வந்து மது​பாட்​டில் கேட்​கும் போது, அந்த நேரத்​தில் மது​பாட்​டிலை ஸ்கேன் செய்து கொடுக்​காமல், முன்​கூட்​டியே மொத்​த​மாக ஸ்கேன் செய்து இருப்பு வைத்​துக் கொண்​டு, ஸ்கேன் செய்து வைக்​கப்​பட்​டிருக்​கும் பாட்​டில்​களை எடுத்து ஊழியர்​கள் விற்​பனை செய்து வரு​கின்​றனர். மேலும், அதற்​கான ரசீதை​யும் குடிமகன்​களிடம் வழங்​கு​வ​தில்​லை. அந்த ரசீதுகளை வரவு, செலவு கணக்​கு​களை அதி​காரி​களிடம் காட்​டு​வதற்​காக பயன்​படுத்தி வரு​கிறார்​கள்.

ரூ 1 லட்சம் வரை கைமாற்றம்: மேலும், மொத்​த​மாக முன்​கூட்​டியே ஸ்கேன் செய்து வைக்​கப்​பட்​டிருக்​கும் பாட்​டில்​களில், விற்​பனை​யா​காமல் இருப்பு இருக்​கும் பாட்​டில்​களுக்​கான தொகை​யை, கடை ஊழியர்​கள் தங்​களது சொந்த பணத்​தில் இருந்து செலுத்​தி, மறு​நாள் மீத​முள்ள பாட்​டில்​களை விற்​பனை செய்​து, அதிலிருந்து தாங்​கள் செலுத்​திய பணத்தை எடுத்​துக் கொள்​கின்​றனர். இவ்​வாறு தின​மும், ரூ.80,000 முதல் ரூ.1 லட்​சம் வரை பணத்தை கைமாற்றி கொள்​வ​தாக கடை ஊழியர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

அதே​போல், கைகளில் பணத்தை நேரடி​யாக வாங்​காமல், டிஜிட்​டல் பரிவர்த்​தனை மூலம் தின​மும் 50 சதவீதம் அளவில் மது​பாட்​டில்​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என ஊழியர்​களுக்​கு, அதி​காரி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். இதனால், 50 சதவீதம் டிஜிட்​டல் பரிவர்த்​தனை இல்​லாத கடைகளில், ஊழியர்​கள் தங்​கள் வங்கி கணக்​கில் உள்ள தொகை​யை, கடை​யின் வங்கி கணக்​குக்கு டிஜிட்​டல் பரிவர்த்​தனை செய்​து, அந்த தொகையை ரொக்​கப் பணமாக கடைகளில் இருந்து எடுத்து கொண்​டு, 50 சதவீத டிஜிட்​டல் பரிவர்த்​தனை செய்​த​தாக கணக்கு காட்டி வரு​கிறார்​கள்.

இது போன்ற தவறான வழி​காட்​டு​தல்​களை டாஸ்​மாக் அதி​காரி​கள் தான் தங்​களுக்கு வழங்​கு​வ​தாக ஊழியர்​கள் குற்​றம்சாட்​டு​கின்​றனர். அந்த வகை​யில், டாஸ்​மாக் கடைகள் வெறும் பெயரளவு தான் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டிருக்​கிறது எனவும், இதனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை என்​றும், இதனால் தங்​களுக்கு தான் இதனால் வேலைப்​பளு அதி​கரித்​துள்​ளது என ஊழியர்​கள்​ குற்​றம்​சாட்​டி வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x