Published : 03 Jul 2025 04:49 AM
Last Updated : 03 Jul 2025 04:49 AM

மக்கள் தேவையறிந்து செயல்படுவதே என் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ​விமர்​சனங்​களை பார்த்து கவலைப்​ப​டா​மல் மக்​கள் தேவையறிந்து செயல்படுவதே எனது பணி என்று திருமண விழா​வில் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​னார். இந்து சமய அறநிலை​யத்​துறை சார்​பில், ராஜா அண்​ணா​மலைபுரம், கபாலீஸ்​வரர் கற்​ப​காம்​பாள் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில், 32 ஜோடிகளுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திரு​மணத்தை நடத்தி வைத்​து, சீர்​வரிசைகளை வழங்​கி​னார்.

அப்​போது முதல்​வர் பேசி​ய​தாவது: திமுக ஆட்​சி​யில் 3,177 கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்​தி​யிருக்​கிறோம். 997 கோயில்​களுக்கு சொந்​த​மான ரூ.7, 701 கோடி மதிப்​பிலான, 7, 655.75 ஏக்​கர் நிலங்​களை மீட்​டுள்​ளோம். 2,03,444ஏக்​கர் நிலங்​கள் அளக்​கப்​பட்டு பாது​காக்​கப்​பட்​டிருக்​கிறது. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்​பில் 26 ஆயிரம் திருப்​பணி​கள் நடை​பெற்று வரு​கிறது. 12,876 கோயில்​களுக்கு திருப்​பணி​கள் மேற்​கொள்ள அனு​மதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரம் ஆண்டு பழமை​யான கோயில்​களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானி​யம் வழங்​கப்​பட்​டுள்​ளது. 30 கோயில்​களில், நாள் முழு​வதும் திரு​வ​முது வழங்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த வரிசை​யில் இது​வரை 2376 திரு​மணங்​களை, கட்​ட​ணமில்​லாமல், சீர்​வரிசைப் பொருட்​களை​யும் வழங்கி நடத்தி வைத்​திருக்​கிறோம். திமுக அரசு செய்​யும் இது​போன்ற சாதனை​களை, சமூகத்தை பிளவுப்​படுத்​தும் எண்​ணங்களை​ கொண்​ட​வர்​களால் சகித்​துக் கொள்ள முடிய​வில்​லை.

பக்தி என்ற பெயரில் பகல்​வேஷம்​போடு​பவர்​களால் தாங்க முடிய​வில்​லை. ஆனால், உண்​மை​யான பக்​தர்​கள், இந்த ஆட்​சி​யின் ஆன்​மீகத் தொண்டை பாராட்​டு​கின்​றனர். ஆதர​வற்ற அவதூறுகள், விமர்​சனங்​களை பற்றி நாங்​கள் ஒரு​போதும் கவலைப்​பட்​ட​தில்​லை. மக்களின் தேவையறிந்து செயல்படுவதே என்​னுடைய பணி. உண்​மை​யான பக்​தர்​களின் நலனுக்​காக தொடர்ந்​து செயல்​படு​வோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x