Published : 03 Jul 2025 04:41 AM
Last Updated : 03 Jul 2025 04:41 AM

சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

சென்னை: ​மாநிலத்​தின் தலைநக​ரான சென்​னை​யில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை முழு​மை​யாக அகற்​றாதது ஏன் என்​றும், இதில் ஏதாவது சிக்​கல் உள்​ளதா எனவும் கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்​றம், வரும் ஜூலை 24-ம் தேதிக்​குள் அனைத்து மாவட்​டங்​களி​லும் அனு​ம​தி​யின்றி வைக்​கப்​பட்​டுள்ள கொடிக்​கம்​பங்​களை முழு​மை​யாக அகற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், தேசிய மற்​றும் மாநில, நெடுஞ்​சாலைகள், உள்​ளாட்​சிக்கு சொந்​த​மான இடங்​களில் அனு​மதி​யின்றி வைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​கள் மற்​றும் சங்​கங்​களின் கொடிக் கம்​பங்​களை கடந்த ஏப்​.28-ம் தேதிக்​குள் அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் ஏற்​கெனவே கடந்த ஜனவரி மாதம் உத்​தர​விட்​டிருந்​தார்.

அந்த உத்​தர​வில் அரசி​யல் கட்​சி​யினர், பிற அமைப்​பினர் தங்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் முறை​யாக அனு​மதி பெற்று நிரந்தர கொடிக் கம்​பங்​களை வைத்​துக் கொள்​ளலாம் என்​றும், தனி​யார் இடங்​களில் கொடிக் கம்​பங்​கள் அமைப்​பது தொடர்​பாக தமிழக அரசு உரிய வழி​காட்டு விதி​முறை​களை உரு​வாக்க வேண்​டும், எனவும் நீதிபதி அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக கடந்த மாதம் விசா​ரணைக்கு வந்​த​போது, அரசு தரப்​பில் எந்​தெந்த மாவட்​டங்​களில் எத்​தனை சதவீதம் பொது இடங்​களில் அனு​ம​தி​யின்றி வைக்​கப்​பட்டு இருந்த கொடிக்​கம்​பங்​கள் அகற்​றப்​பட்​டுள்​ளது என்​பது தொடர்​பான அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி, பொதுக்​கூட்​டங்​களில் நடப்​படும் கொடிக்​கம்​பங்​களுக்கு தலா ரூ. ஆயிரம் வரை கட்​ட​ணம் வசூலிக்​கலாம் என்​றும், சாலை​யோரங்​களி​லும், சாலை​யின் நடு​விலும் எக்​காரணம் கொண்​டும் கொடிக்​கம்​பங்​களை நடக்​கூ​டாது என்​றும் உத்​தர​வி்ட்​டிருந்​தார்.

மேலும், இதுதொடர்​பாக ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி கொடிக்​கம்​பங்​கள் சாலை​யோரம் மற்​றும் பொது இடங்​களில் இல்லை என்​பதை உறுதி செய்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​கள் ஜூலை 2-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என்​றும், இந்த உத்​தரவை அமல்​படுத்​தாத மாவட்ட ஆட்​சி​யர்​கள் ஜூலை 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும், எனவும் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன், ‘‘தமிழகம் முழு​வதும் 19 மாவட்​டங்​களில் பொது இடங்​களில் இருந்த கொடிக்​கம்​பங்​கள் 100 சதவீதம் அகற்​றப்​பட்டு வி்ட்டது என்​றும், 10-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​களில் 90 சதவீதம் கொடிகள் அகற்​றப்​பட்​டுள்​ளது என்​றும், சென்​னை​யில் 31 சதவீதம் மட்​டுமே கொடிகள் அகற்​றப்​பட்​டுள்​ளது எனக்​கூறி அறிக்கை தாக்​கல் செய்​தார்.

மேலும், பொது இடங்​களில் அரசி​யல் கட்​சிகள் நடத்​தும் கூட்​டங்​களுக்கு வாடகை வசூலிப்​பது குறித்​தும், மற்ற மாவட்​டங்​களில் கொடிக்​கம்​பங்​களை முழு​மை​யாக அகற்​றியது குறித்​தும் அறிக்கை தாக்​கல் செய்ய 4 வாரம் காலஅவ​காசம் வழங்க வேண்​டும், என கோரிக்கை விடுத்​தார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, தலைநக​ரான சென்​னை​யில் 31 சதவீத கொடிக்​கம்​பங்​கள் மட்​டுமே அகற்​றப்​பட்​டுள்​ள​தாக அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தால், சென்​னை​யில் முழு​மை​யாக அகற்​றாதது ஏன் என்​றும், அதில் ஏதாவது சிக்​கல் உள்​ளதா என்​றும் கேள்வி எழுப்​பி​னார்.

மேலும் சாலை நடு​வில் தடுப்​பு​களின் அருகே கொடிக்​கம்​பங்​களை நட அனு​ம​தி​யளித்​துள்​ளீர்​கள், இது அபாயகர​மானது என்​றும், விலை மதிப்​பில்​லாத மனித உயிர்​களுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்​டும் என்​றும் கருத்து தெரி​வித்​தார். பின்​னர் அரசின் கோரிக்​கையை ஏற்று இந்த விவ​காரத்​தி்ல் பதிலளிக்க ஜூலை 24-ம் தேதி வரை அவகாசம் வழங்​கி​னார்.

இந்த காலக்​கட்​டத்​துக்​குள் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பொது இடங்​களில் அனு​ம​தி​யின்றி வைக்​கப்​பட்​டுள்ள கொடிக்​கம்​பங்​களை முழு​மை​யாக அகற்​றா​விட்​டால், சம்​பந்​தப்​பட்ட மாவட்​டங்​களின் ஆட்​சி​யர்​கள் கட்​டா​யம் நேரில் ஆஜராக உத்​தர​விடப்​படும்​, என எச்​சரித்​து வி​சா​ரணை​யை ஜூலை 24-க்​கு தள்​ளி வைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x