Published : 02 Jul 2025 09:36 AM
Last Updated : 02 Jul 2025 09:36 AM

‘அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து சாப்பிடக் கூடாதுல்ல...’ - நேருவுடன் நேருக்கு நேராய் மோதும் திருச்சி திமுக எம்எல்ஏக்கள்!

திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.

நேரு​வின் சொந்த ஊரை உள்​ளடக்​கிய லால்​குடி தொகு​திக்கு எம்​எல் ஏ-வாக இருக்​கும் சவுந்​தர​பாண்​டியன், “எனது தொகு​திக்​குள் நடக்​கும் நிகழ்ச்​சிகளுக்கு கூட அதி​காரி​கள் என்னை அழைக்​கப் பயப்​படு​கி​றார்​கள். அதற்​குக் காரணம் அமைச்​சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்​கப்​பட்​டார். இந்​தப் பஞ்​சா​யத்து அறி​வால​யம் வரைக்​கும் போய் சமா​தானம் செய்​து​வைக்​கப்​பட்ட பிறகும் சவுந்​தர​பாண்​டியன் - நேரு சச்​சர​வு​கள் முடிவுக்கு வந்​த​பாடில்​லை.

அண்​மை​யில், தனது மகன் திரு​மணத்தை நடத்தி வைக்க முதல்​வர் ஸ்டா​லினிடம் தேதி வாங்​கித் தரும்​படி சவுந்தர பாண்​டியன் நேருவை அணுகிய​தாகச் சொல்​கி​றார்​கள். ஆனால், நேரு இந்த விஷத்​தில் அக்​கறை காட்​ட​வில்​லை. மாறாக, திரு​மணத்​துக்கு தனக்​கெல்​லாம் பத்​திரிகை வைக்க வேண்​டாம் என நேரு சொன்​ன​தாகத் தெரி​கிறது. இதனால், மாவட்ட அமைச்​ச​ரான நேருவை திரு​மணத்​துக்கு அழைக்​காமலேயே விட்​டிருக்​கி​றார் சவுந்​தர​பாண்​டியன். நேரு இந்​தத் திரு​மணத்​தில் கலந்​து​கொள்​ளா​விட்​டாலும் அமைச்​சர்​கள் அன்​பில் மகேஸ், எஸ்​.எஸ்​.சிவசங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டார்​கள்.

சவுந்​தர​பாண்​டிய​னைப் போல​வே, ஸ்ரீரங்​கம் எம்​எல்​ஏ-​வான பழனி​யாண்​டி​யும் நேரு​வுக்கு எதி​ராக அடிக்​கடி பொது மேடைகளில் எதை​யா​வது பேசி​விட்டு கப்​சிப் ஆகி​விடு​கி​றார். 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, கரூர் மாவட்​டத்​தில் உள்ள பழனி​யாண்​டி​யின் கல் குவாரி​யில் வரு​வாய்த்​துறை​யினர் ரெய்டு நடத்​தினர். அப்​போது, “இதற்​குக் காரணம் நேரு​தான்” என பொத்​தாம் பொது​வில் குண்​டைத் தூக்​கிப் போட்ட பழனி​யாண்​டி, பின்​னர் சமா​தான​மா​னார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் சாலைப்​பாது​காப்பு மற்​றும் மாவட்ட வளர்ச்​சிப் பணி​கள் ஆய்​வுக் கூட்​டம் திருச்சி ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட பழனி​யாண்​டி, “எனது தொகு​தி​யில் கண்​ணுடை​யான்​பட்​டி, சமுத்​திரம் பகு​தி​களுக்கு 2 பாலங்​கள் கட்ட ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதை வேறெங்​கும் மாற்​றி​வி​டா​மல் எனது தொகு​தி​யிலேயே கட்​ட​வேண்​டும். ஏனென்​றால், ஏற்​கெனவே சமுத்​திரம் பாலத்தை மண்​ணச்​சநல்​லூர் தொகு​திக்கு மாற்​றிய​தில் எங்​கள் அமைச்​சர் (நேரு) மீது எனக்கு வருத்​தம் உண்​டு. அடுத்​தவங்க சாப்​பாட்டை எடுத்து சாப்​பிடக் கூடாதுல்ல” என்று தடாலடி​யாகப் பேசி​னார்.

இந்த 2 எம்​எல்​ஏ-க்​களும் இப்​படி எதை​யா​வது பேசி நேரு வட்​டாரத்தை உஷ்ணமேற்றி வரும் நிலை​யில், கடந்த 19-ம் தேதி அமைச்​சர் நேரு தலை​மை​யில் நடை​பெற்ற திருச்சி மத்​திய, வடக்கு மாவட்ட திமுக செயற்​குழுக் கூட்​டத்​தி​லும் இவர்​கள் கலந்​து ​கொள்​ளாமல் புறக்​கணித்​திருக்​கி​றார்​கள். 2021-ல் திருச்சி மாவட்​டத்​தில் உள்ள 9 தொகு​தி​களை​யும் திமுக கூட்​டணி வசப்​படுத்​தி​ய​தில் நேரு​வுக்கு பெரும் பங்கு உண்​டு. திருச்சி மாவட்​டத்​தைப் பொறுத்​தவரை தேர்​தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்​டும்... யாருக்கு கொடுக்​கக் கூடாது என தீர்​மானிப்​பவர் நேரு தான்.

பழனி​யாண்​டி, சவுந்​தர​பாண்​டியன்

இந்த நிலை​யில், நேரு​வுக்கு எதி​ராக குடைச்​சல் கொடுத்து வரும் இந்த 2 எம்​எல்​ஏ-க்​களுக்​கும் இந்​தத் தேர்​தலில் சீட் கிடைப்​பது கஷ்டம் தான் என்​கி​றார்​கள் திருச்சி திமுக-​வினர் இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர்​கள், “இவர்​கள் இரு​வ​ருமே நேரு​வால் உரு​வாக்​கப்​பட்​ட​வர்​கள் தான். குறிப்​பாக, சவுந்​தர​பாண்​டியன் 4 முறை எம்​எல்​ஏ-​வாக வலம் வரக் காரணமே நேரு தான். ஆனால் கேட்​பார் பேச்​சைக் கேட்டு அவர் நேரு​வுக்கு எதி​ராக நடந்து கொள்​கி​றார். தன்னை விமர்​சித்​துப் பேசுவது தெரிந்​தும் பழனி​யாண்​டிக்கு கடந்த முறை சீட் வாங்​கிக் கொடுத்​தார் நேரு. ஆனால், இந்​த​முறை அப்​படி பெருந்​தன்​மை​யாக நடந்​து​கொள்​வாரா என்று சொல்​ல​முடி​யாது” என்​றார்​கள்.

இதுகுறித்து சவுந்​தர​பாண்​டினிடம் கேட்​டதற்​கு, “யாருக்கு சீட் தரு​வது என்​பதை கட்​சித் தலைமை தான் முடிவு செய்​யும். எனது கட்​சிப் பணி​கள், மக்​கள் பணி​களை பார்த்து கட்​சித் தலைமை எடுக்​கும் முடிவுக்கு நான் கட்​டுப்​படு​வேன்” என்​றார். அமைச்​சர் நேரு​வுக்​கும் உங்​களுக்​கும் என்​ன​தான் பிரச்​சினை எனக் கேட்​டதற்​கு, “அதுப்​பற்​றியெல்​லாம் இப்ப பேச வேண்​டாங்க” என்​றார்.

பழனி​யாண்​டியோ, “எனக்​கும் அமைச்​சருக்​கும் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. நாங்​கள் நல்ல நட்​பில் தான் இருக்​கி​றோம். எங்​களை பிரிக்​கப் பார்க்​காதீர்​கள். நான் அரசி​யலில் வளரணும்” என்று முடித்​துக் கொண்​டார்.மற்ற ஊர்ப் பஞ்​சா​யத்​துக்​கெல்​லாம் நாட்​டா​மை​யாக இருக்​கும் அமைச்​சர் நேரு, சொந்த ஊர்ப் பஞ்​சா​யத்தை தீர்க்​க​முடி​யாமல் இருப்​பது கஷ்ட​காலம் தான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x