Published : 02 Jul 2025 05:37 AM
Last Updated : 02 Jul 2025 05:37 AM

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் 7 பேர் கைது

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து 200 விசைப்​படகு​களில் 1,500-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் நேற்று முன்தினம் கடலுக்​குச் சென்​றனர்.

இதில் ஆரோக்​கியடேனியல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் பெரிக், சீனு, சசிக்​ கு​மார், முக்​கூ​ரான், முத்து சரவணன், காளி​தாஸ், செந்​தில் ஆகிய 7 மீனவர்​கள் பாக் நீரிணை கடல் பகு​தி​யில் தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். நேற்று அதி​காலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி 7 மீனவர்​களையும் கைது செய்​தனர்.

பின்​னர், சிறைபிடிக்​கப்​பட்ட 7 மீனவர்​களும் தலைமன்​னார் கடற்​படை முகா​முக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, அந்​நாட்டு மீன்​வளத் துறை​யினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். தொடர்ந்து அவர்​கள் மன்​னார் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, வவுனியா சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். கடந்த 3 நாட்​களில் மட்​டும் ராமேசுவரத்​தைச் சேர்ந்த 2 விசைப்​படகு​களை கைப்​பற்​றிய இலங்கை கடற்படை​யினர், 15 மீனவர்​களைக் கைது செய்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

முதல்வர் கடிதம்: இதற்கிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகினையும் இலங்கைக் கடற் படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ஏற்கெனவே 48 இந்திய மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ள நிலையில், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x