Published : 02 Jul 2025 04:52 AM
Last Updated : 02 Jul 2025 04:52 AM

திமுக ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிப்பு: தலைவர்கள் கண்டனம்; தேமுதிக, தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: ​வி​சா​ரணை​யின்​போது கோ​யில் காவலர் உயி​ரிழந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்டு தேமு​திக, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் ஆர்ப்​பாட்​டம் அறி​வித்​துள்​ளன.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: இது முழுக்க முழுக்க மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசின் காவல்​துறை அராஜகத்​தால் நடந்த கொலை. அவரது ஆட்​சி​யில் நடந்த 25 காவல் மரணங்​களும் அப்​பட்​ட​மான மனிதஉரிமை மீறல். இதை தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் விசா​ரிக்க வேண்​டும். பதில் சொல்ல வேண்​டிய முதல்​வர் எங்கே ஒளிந்து கொண்​டிருக்​கிறார். சிபிசிஐடி விசா​ரணை மீது துளி கூட நம்​பிக்​கை​யில்​லை. அவரது தறிகெட்ட ஆட்​சி​யில் பாது​காப்​பின்றி தமிழக மக்​கள் தவிக்​கின்​றனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​கு​மார் மரணம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய கண்​காணிப்​பில் உயர்​நிலைக் குழு அமைத்​து, சுதந்​திர​மான முறை​யில் விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும். கடந்த 5 ஆண்​டு​களில் காவல்​நிலைய விசா​ரணை​யின்​போது நிகழ்ந்த மரணம் குறித்து தமிழக அரசிடம் ஆணை​யம் அறிக்கை கேட்க வேண்​டும். இதில் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு கிடைப்​பதை உறுதி செய்ய வலி​யுறுத்தி தேசிய மனித உரிமை​கள் ஆணை​யத்​துக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

பாமக தலை​வர் அன்​புமணி: அஜித்​கு​மார் கொலை வழக்​கில் நியா​யம் வழங்​கப்​படும் என்று ஒரு​புறம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்
கூறி வரும் நிலை​யில், இன்​னொரு​புறம் அவரது கட்​டுப்​பாட்​டில் உள்ள காவல்​துறை இந்த படு​கொலையை இயற்கை மரண​மாக மாற்ற துடித்​துக் கொண்​டிருக்​கிறது. தொடர்​புடைய உயர​தி​காரி​களும் கைது செய்​யப்​பட்​டு, வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்​படும் வரை பிணை வழங்​கப்​ப​டா​மல் இருப்​பது உறுதி செய்​யப்பட வேண்​டும்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: காவல் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் இருக்​கும்​போது இனி மரணங்​கள் ஏற்​ப​டாது என்று 2022-ம் ஆண்டு தமிழக சட்​டப் பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உறுதி அளித்​தார். அதற்​குப் பிறகு கிட்​டத்​தட்ட 25 மரணங்​கள் ஏற்​படு​வதை பார்க்​கும்​போது, காவல் துறை முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் இருக்​கிறதா என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. காவல் நிலை​யத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் பாது​காப்பு இல்லை என்ற அவல நிலை தமிழகத்​தில் ஏற்​பட்டு இருக்​கிறது.

விசிக பொதுச்​செய​லா​ளர் சிந்​தனைச் செல்​வன்: விசா​ரணை​யின்​போது மரணங்​களே இல்​லாத தமிழக​மாக நம்​மாநிலம் தலைநிமிர வேண்​டும் என முதல்​வர் தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும் அறி​வுறுத்​தி​யும் கூட லாக்​கப் படு​கொலைகள் தொடர்​வது வேதனைக்​குரிய​தாக இருக்​கிறது. திரு​புவனம் அஜித்​கு​மார் காவல் விசா​ரணை என்ற பெயரில் கொல்​லப்​பட்​டிருப்​பது பெரும் கண்​டனத்​துக்​குரியது. முதல் முறை​யாக இத்​தகைய நேர்​வில் கொலை வழக்கு பதிவு செய்​யப்​பட்​டிருப்​பதும், காவலர்​கள் கைது செய்​யப்​பட்​டிருப்​பதும் நம்​பிக்​கையை ஊட்​டு​வ​தாக அமைந்​திருக்​கிறது.

தவெக தலை​வர் விஜய்: எந்த அளவுக்​குக் கொடூர​மாக, மனி​தாபி​மானம் அறவே அற்​று, சாமானியருக்கு அநீதி இழைக்​கும் அறமற்ற துறை​யாக மு.க.ஸ்​டா​லினின் நேரடிக் கண்​காணிப்​பில் இயங்​கும் காவல் துறை நடந்​து​ கொள்​கிறது. காவல்​நிலைய மரணம் தொடர்​பான வெள்ளை அறிக்​கையை முதல்​வர் உடனடி​யாக வெளி​யிட வேண்​டும். இத்​தகைய கொடூர சம்​பவம் இனி ஒரு​போதும் நடை​பெறாது என மக்​களுக்கு உடனடி​யாக உறு​தி​யும் உத்​தர​வாத​மும் முதல்​வர் அளிக்க வேண்​டும்.

ஆர்ப்​பாட்​டம்: இதனிடையே இச்​சம்​பவத்தை கண்​டித்து வரும் 5-ம் தேதி சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் வெள்​ளிச் சந்தை திடலில் மாலை 4 மணி​யள​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தேமு​திக தலை​மையகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இதபோல் தவெக பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மரணத்​துக்கு நீதி கேட்​டும் உயர் நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பில் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதி வி​சா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தி​யும் சென்​னை​யில்​ நாளை (ஜூலை 3) கண்​டன ஆர்ப்​பாட்​டம்​ நடை​பெறும்” என தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x