Published : 30 Jun 2025 04:49 AM
Last Updated : 30 Jun 2025 04:49 AM

தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்

சென்னை: எங்​கள் கூட்​டணி யார் தலை​மை​யில் என்​பதை பலமுறை பல விளக்​கங்​களை அமித் ஷா சொல்​லி​விட்​டார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகள் வர இருக்​கிறார்​கள் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். பிரதமர் மோடி​யில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழு​வதும் நேற்று ஒலிபரப்​பானது. அதன் ஒருபகு​தி​யாக தி.நகரில் உள்ள தனி​யார் மண்​டபத்​தில் பாஜக சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்​வில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்​டார்.

இதையடுத்​து, ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகள் பயன்​படுத்​தும் நிலத்​தடி நீருக்கு மத்​திய அரசு வரி விதிக்க உள்​ளது என்ற தவறான தகவலை வேக​மாக பரப்பி வரு​கிறார்​கள். மத்​திய அரசு அதற்​கான விளக்​கத்தை ஏற்​கெனவே கொடுத்​துள்​ளது.

விவ​சா​யிகளுக்​கான நிலத்​தடி நீரில் எந்த ஒரு கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது என்​பதை ஜல்​சக்தி துறை அமைச்​சகம் தெளி​வாக கூறி​யுள்​ளது. திரு​மாவளவன் முதலில், திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யா, விசிக தலை​மையி​லான கூட்​ட​ணியா என்​று​தான் அவர் கேட்க வேண்​டும். அதுவே சரி​யாக இருக்​கும். திமுக கூட்​டணி உடை​யும் நிலை​யில் இருக்​கிறது. பல கட்​சிகள் கூட்​ட​ணி​யில் இருந்து வெளியே வர இருக்​கிறார்​கள்.

அந்த கூட்​ட​ணி​யில் தங்​களை தக்க வைத்​துக் கொள்​ளும் வேலையை மட்​டும் திரு​மாவளவன் செய்ய வேண்​டும். எங்​கள் கூட்​டணி யார் தலை​மை​யில் என்​பதை பலமுறை பல விளக்​கங்​களை அமித் ஷா சொல்​லி​விட்​டார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகள் வர இருக்​கிறார்​கள். அவர்​களு​டன் நாங்​கள் பேசிக் கொண்டு இருக்​கின்​றோம்.

திமுக ஒரு முறை கடவுள் இருக்​கிறது என்​பார்​கள். இன்​னொரு முறை கடவுள் இல்லை என்​பார்​கள். நாம் வேல் எடுத்​தால், அவர்​களும் வேல் எடுப்​பார்​கள். முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் என்று ஜாதகம் பார்த்து பெயர் வைத்து கொள்​வார்​கள். தேவையென்​றால் அவர்​கள் கோயிலுக்கு செல்​வார்​கள். இவையெல்​லாம் திமுக​வின் இரட்டை நிலை​பாட்டை தான் காட்​டு​கிறது. மத்​திய அமைச்​சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசுவது தமிழனுக்​கு, தமிழகத்​துக்​கும் அழகல்ல.

ஆ.ராசா உடனடி​யாக பொது​மக்​கள் மத்​தி​யில் மன்​னிப்பு கேட்க வேண்​டும். முதல்​வர் ஸ்டா​லின் இதில் தலை​யிட்டு ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். 2026-ல் அமைய போவது அதி​முக ஆட்​சி​யா, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆட்​சியா என்​ப​தற்​கான பதிலை பல தலை​வர்​கள் பல முறை சொல்​லி​விட்​டார்​கள். தேசிய ஜனநாயக கூட்​டணி தான் ஆட்சி அமைக்​கும். அதி​முக தமிழகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கு தலை​மை ஏற்​பார்​கள்​. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x