Published : 29 Jun 2025 11:32 AM
Last Updated : 29 Jun 2025 11:32 AM
இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16 ஆம் தேதி முதல் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடித் தடைக்காலம் நிறைவுற்று இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள். அதற்குள், இருமுறை அவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.
மீனவர்கள் விவரம்: முன்னதாக நேற்று ( சனிக்கிழமை ) காலை வேர்க்கோடு, மண்டபம், ராமேஸ்வரத்தில் இருந்து 466 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இதில் ஒரு படகில் சென்ற ஜேசு (39), என்.அண்ணாமலை (55). கல்யாணராமன் (45). சையது இப்ரஹிம் (35), செல்வம் (29), காந்திவேல் மற்றும் ஒரு மீனவர் உள்பட 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்தது. தமிழக மீனவர்கள் கைதுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூடவே, மீனவர் பிரச்சினையில் நிரந்தத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT