Published : 27 Jun 2025 08:45 PM
Last Updated : 27 Jun 2025 08:45 PM
திருவள்ளூர்: “தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ல் பாஜக தலைமையில் கூட்டணியா? அல்லது அதிமுக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வி எழுகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (ஜூன் 28) திருவள்ளூர் பகுதியில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டுமே தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என கூறுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணியா? அல்லது அதிமுக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வி எழுகிறது. கூட்டணிக் குறித்து அறிவிக்க வேண்டியவர்கள் அமித் ஷாவா? அல்லது அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமியா? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கெல்லாம் எடப்பாடி கே. பழனிசாமிதான் பதில் அளிக்க வேண்டும் அல்லது விளக்கம் அளிக்கவேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT