Published : 26 Jun 2025 11:33 AM
Last Updated : 26 Jun 2025 11:33 AM
விழுப்புரம்: “கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று (ஜூன் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கலைஞர் தன் இறுதி மூச்சுவரை திமுக தலைவராக இருந்தார். அதேபாணியில் என் இறுதி மூச்சுவரை பாமகவுக்கு நானே தலைவராக இருப்பேன். கருணாநிதி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் அப்பதவிக்காக எப்போதும் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும். என் காலம் முடியும் வரை அன்புமணி பாமகவின் செயல் தலைவராக இருக்க வேண்டும்.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனது 60-வது திருமண நாள் விழாவுக்கு அன்புமணி வராதது வருத்தமாக இருக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாமக பொதுக்குழு கூடும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT