Published : 22 Jun 2025 12:35 AM
Last Updated : 22 Jun 2025 12:35 AM
தமிழகத்தில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 22) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 23 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் 5 செ.மீ., சென்னை மணலி, மடிப்பாக்கம், கண்ணகி நகர், மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம், சேலம் மாவட்டம் சந்தியூர், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஆகிய இடங்களில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, உபாசி, சின்னக்கல்லாறு, சோலையாறு, வால்பாறை, சென்னை கத்திவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT