Published : 19 Jun 2025 04:51 PM
Last Updated : 19 Jun 2025 04:51 PM
ராமேசுவரம்: மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒரு மீனவர் மாயமானார். கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), பரிது (28), இப்ராஹிம்சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். புதன்கிழமை நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்தது. அதைத்தொடர்ந்து விசைப்படகு கடலில் மூழ்கியது. படகிலிருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அப்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைவாக செயல்பட்டு அனீஸ், மாதவன், பரிது ஆகியோரை மீட்டனர். ஆனால் இப்ராஹிம்சாவை நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்கப்பட்ட 3 மீனவர்களுடன் மற்ற மீனவர்கள் வியாழக்கிழமை காலை கரைக்கு திரும்பி வந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத் துறை மற்றும் மெரைன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 3 படகுகளில் சென்று இப்ராஹிம்சாவை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT