Last Updated : 19 Jun, 2025 09:56 AM

 

Published : 19 Jun 2025 09:56 AM
Last Updated : 19 Jun 2025 09:56 AM

2026-ல் அதிமுகவுக்கு நிலைக்குமா நிலக்கோட்டை? - வரிந்து கட்டி வேலை செய்யும் திமுக!

கரி​கால் பாண்​டியன், யாகப்​பன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை (தனி) தொகுதிகளை இப்போது அதிமுக தன்வசமாக்கி வைத்திருக்கிறது. இதில், சுமார் அரை நூற்றாண்டு காலமாக வென்றெடுக்க முடியாமல் இருக்கும் நிலக்கோட்டையை வென்றெடுக்க இம்முறை திட்டம் வகுத்து செயலாற்றி வருகிறது திமுக.

நிலக்​கோட்டை தொகு​தி​யானது காங்​கிரஸ் பாரம்​பரியமிக்க தொகு​தி. 1952, 1957, 1962-ம் ஆண்டு தேர்​தல்​களில் இங்கு காங்​கிரஸே கொடி நாட்டி இருக்​கிறது. 1967-ல் தான் திமுக இங்கு முதல்​முறை​யாக வாகை சூடியது. அதற்கு அடுத்து வந்த தேர்​தலிலும் திமுக-வுக்கு நிலக்​கோட்டை நிலைத்​தது. அது​தான் இந்​தத் தொகு​தி​யில் திமுக கடைசி​யாக வென்ற தேர்​தல். அதன் பிறகு இங்கு சூரிய​னுக்கு வேலையே இல்​லாமல் போய்​விட்​டது.

1977-ல் முதல் முறை​யாக நிலக்​கோட்​டையை அதி​முக கைப்​பற்​றியது. 1980-ல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த ஏ.எஸ்​.பொன்​னம்​மாள் இங்கே சுயேச்​சை​யாக போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். 1984-ல் மீண்​டும் இங்கு அதி​முக வென்​றது. அதன் பிறகு வந்த தேர்​தல்​களில் எல்​லாம் திமுக-​வும் அதி​முக-​வும் இந்​தத் தொகு​தியை தங்​களின் கூட்​டணி தோழ​னான காங்​கிரஸுக்​கும் தமா​கா-வுக்​கும் ஒதுக்​கி​விட்​டன. 1989-ல் தனித்​துப் போட்​டி​யிட்டு வென்ற காங்​கிரஸ் வேட்​பாள​ரான எஸ்​.ஏ.பொன்​னம்​மாள், 1991, 1996 தேர்​தல்​களில் அதி​முக, திமுக கூட்​ட​ணி​களில் காங்​கிரஸ் மற்​றும் தமாகா வேட்​பாள​ராக நின்று வென்​றார்.

2001 மற்​றும் 2006 தேர்​தல்​களில் அதி​முக-வே நிலக்​கோட்​டை​யில் நேரடி​யாக களமிறங்கி வென்​றது. 2011-ல் தமது கூட்​ட​ணிக் கட்​சி​யான புதி​யதமி​ழ​கம் கட்​சிக்கு இந்​தத் தொகு​தியை விட்​டுக் கொடுத்​தது அதி​முக. அதி​முக செல்​வாக்​கில் அப்​போது புதிய தமி​ழ​க​மும் இங்கு வென்​றது. அதனைத் தொடர்ந்து 2016 மற்​றும் 2019 இடைத்​தேர்​தல், 2021 ஆகிய தேர்​தல்​களி​லும் நிலக்​கோட்​டையை கெட்​டி​யாக தக்​க​வைத்​துக் கொண்​டது அதி​முக.

திமுக கூட்​ட​ணி​யில் நிலக்​கோட்​டையை காங்​கிரஸுக்கு ஒதுக்​கிய போதெல்​லாம் இங்கு திமுக கூட்​ட​ணிக்கு வெற்றி கிடைத்​திருக்​கிறது. அது​வே, திமுக களமிறங்​கி​னால் தோல்வியே மிஞ்சி இருக்​கிறது. அந்​தளவுக்கு கெட்​டிக்​காரத்​தன​மாக வாக்​களித்து வந்​திருக்​கி​றார்​கள் நிலக்​கோட்டை தொகுதி மக்​கள். இதனால் 1971-க்​குப் பிறகு சுமார் 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக நிலக்​கோட்​டையை வென்​றெடுக்க முடி​யாமல் போராடு​கிறது திமுக. காங்​கிரஸ் எம்​எல்ஏ-வான பொன்​னம்​மாளின் காலத்​தில் நிலக்​கோட்​டைத் தொகு​திக்கு மகளிர் கலைக்​கல்​லூரியை தந்​தார் கருணாநி​தி. ஆனால், அப்​படிச் சொல்​லிக் கொள்​ளும்​படி​யான எந்​தவொரு திட்​டத்​தை​யும் நிலக்​கோட்​டைக்கு அதி​முக தராத போதும் இரட்டை இலை மீது அசைக்​க​முடி​யாத பற்று வைத்​திருக்​கி​றார்​கள் இத்​தொகுதி மக்​கள்.

கடந்த முறை நிலக்​கோட்டை ஊராட்சி ஒன்​றிய தலை​வ​ராக அதி​முக வேட்​பாளரே வெற்​றி​பெற்​றார். நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்​கம் செய்ய திமுக-​வினர் எவ்​வளவோ முயற்சி செய்​தும் அது முடி​யாமல் போனது. இத்​தனைக்​கும் ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி​யின் சொந்த ஊரான வத்​தல​குண்​டு இந்த நிலக்​கோட்டை தொகு​திக்​குள் தான் வரு​கிறது. இருப்​பினும் இங்கே சூரியனை உதிக்​கவைக்க முடிய​வில்​லை. இந்த நிலை​யில், வழக்​கம் போல கூட்​ட​ணிக்கு தள்​ளி​வி​டா​மல் இம்​முறை இங்கு தங்​கள் வேட்​பாளரையே களமிறக்க திமுக தலைமை திட்​ட​மிட்​டிருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது குறித்து நம்​மிடம் பேசிய நிலக்​கோட்டை மேற்கு ஒன்​றிய திமுக செய​லா​ளர் கரி​கால் பாண்​டியன், “தலை​மை​யின் உத்​தர​வுப்​படி நிலக்​கோட்டை தொகு​தியை வென்​றெடுப்​ப​தற்​கான பணி​களை முன்​கூட்​டியே தொடங்​கி​விட்​டோம். அதற்​காக, ஏற்​கெனவே இந்​தத் தொகு​திக்​குள் இருந்த திமுக-​வின் இரண்டு ஒன்​றி​யங்​கள் இப்​போது ஐந்​தாக பிரிக்​கப்​பட்​டு​விட்​டன. இதன் மூலம் பொறுப்​பு​களை பகிர்ந்​தளித்து புதிய பொறுப்​பாளர்​கள் மூல​மாக தேர்​தல் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. இது அதி​முக-வுக்கு சாதக​மான தொகுதி என சொல்​லப்​பட்ட நிலை​யில், 2024 மக்​களவை தேர்​தலில் இந்​தத் தொகு​தி​யில் திமுக கூட்​ட​ணிக்கு 54 ஆயிரம் வாக்​கு​கள் கூடு​தலாக கிடைத்​தன. இதுவே மாற்​றத்​துக்​கான அறிகுறி​தான். எனவே, 2026-ல் நிலக்​கோட்​டையை எளி​தில் கைப்​பற்​று​வோம்” என்​றார்.

நிலக்​கோட்டை ஒன்​றிய அதி​முக செய​லா​ளர் யாகப்​பனோ, “நிலக்​கோட்டை தொகுதி மக்​களின் நல்​லது, கெட்​டது அனைத்​தி​லும் குடும்​பத்​தில் ஒரு​வ​ராக நாங்​கள் பங்​கெடுத்து வரு​ கி​றோம். அதனால் தான் தேர்​தலுக்​குத் தேர்​தல் எங்​களை கூடு​தல் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் மக்​கள் ஜெயிக்க வைத்து வரு​கி​றார்​கள். கடந்த தேர்​தலில் திமுக கூட்​டணி பெரு​வாரி​யாக வெற்​றி​பெற்ற நிலை​யிலும் இந்​தத் தொகு​தி​யில் அதி​முக சுமார் 27 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் ஜெயித்​தது. அதன் பிறகும் திமுக அமைச்​சர்​கள் யாரும் இந்​தப் பக்​கம் எட்​டிப்​பார்​க​வில்​லை. அதனால் இந்​தத் தேர்​தலிலும் நிலக்​கோட்​டை​யில் இரட்டை இலைக்கே மக்​கள் ஜெயம் கொடுப்​பார்​கள். அதை யாராலும் மாற்ற முடி​யாது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x