Last Updated : 19 Jun, 2025 09:33 AM

5  

Published : 19 Jun 2025 09:33 AM
Last Updated : 19 Jun 2025 09:33 AM

மனக்கசப்பில் மதிமுக... மரியாதை கொடுத்து  அழைக்கிறதா பாஜக?

அதிமுக - பாஜக கூட்டணி நிச்சயமற்ற கூட்டணி என்று சொல்லி வரும் திமுக, தங்களது கூட்டணி கட்டுக்கோப்புடன் இருப்பதாக சொல்லி வருகிறது. அதில் கல்லெறியும் விதமாக “திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கொளுத்திப் போட்டிருக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

“​நாங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரும் அந்​தக் கூட்​ட​ணிக் கட்​சி​யானது வாஜ்​பாய் காலத்​தில் எங்​களோடு இருந்த கட்​சி​தான்” என எல்​.​முரு​கன் தெரி​வித்​திருப்​பதை வைத்​துப் பார்த்​தால் அது மதி​முக என்​பது தெளி​வாகிறது. ஆனால், உண்​மை​யிலேயே அந்​தக் கட்சி பாஜக-வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதா அல்​லது இது பாஜக-​வின் தந்​திரமா என்ற சந்​தேக​மும் சிலருக்கு இருக்​கிறது.

திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகள் பாஜக அணி​யில் சேர்​வதற்​கான வாய்ப்​பில்​லை. அவர்​கள் தவெக-வுடன் இணைந்​தால் தான் உண்​டு. ஆனால், விஜய்​யின் அரசி​யல் எதிர்​காலத்​தைப் பற்றி தெரி​யாத நிலை​யில், அவர்​கள் ரிஸ்க் எடுக்க மாட்​டார்​கள். ஆனால், மதி​முக-வுக்கு அப்​படி​யான கட்​டா​யம் ஏதும் இல்​லை. இப்​போ​திருக்​கும் சூழலில் அந்​தக் கட்சி பாஜக கூட்​ட​ணி​யில் இணைவதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் நிறையவே இருக்​கின்​றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய மண்டல மதிமுக நிர்வாகிகள் சிலர், “திமுக மீது மதிமுக-வுக்கு ஏற்பட்ட அதிருப்தி இன்றைக்கு வந்ததல்ல... 2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். ஆனால், தனி சின்னம் என்றால் நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கமுடியும். உதயசூரியனில் போட்டியிட்டால் ஆறு தொகுதிகளை தரத் தயார் என்று சொல்லி நெருக்கடி கொடுத்தது திமுக. மதிமுக-வினர் கூடுதலான தொகுதிகளில் போட்டியிடலாமே என்பதற்காக 6 தொகுதிகளை வாங்கிக் கொண்டு உதயசூரியனில் போட்டியிட சம்மதித்தார் வைகோ. 2016-ல் மக்கள் நல கூட்டணியில் 29 தொகுதிகளில் போட்டியிட்ட தங்களை ஒற்றை இலக்கத்துக்குள் சுருக்கிய திமுக மீது அப்போதே மதிமுக-வுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அடுத்​த​தாக, 2024 மக்​கள​வைத் தேர்​தலிலும் மதி​முக-வுக்கு ஒரே ஒரு தொகு​தியை ஒதுக்​கிய திமுக, அதி​லும் உதயசூரியன் சின்​னத்​தில் தான் போட்​டி​யிட வேண்​டும் என நிர்​பந்​தம் கொடுத்​தது. ஆனால், அதை ஏற்க மறுத்த துரை வைகோ, “செத்​தா​லும் சாவேனே தவிர, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட மாட்டேன்” என்று உணர்ச்​சிவசப்​பட்​டுப் பேசி​னார். இதனால், வேறு வழி​யில்​லாமல் மதி​முக-வை தனி சின்​னத்​தில் போட்​டி​யிட அனு​ம​தித்​தது திமுக. அப்​போதும் பெரும் மன உளைச்​சலுக்கு ஆளான துரை வைகோ, அண்​மை​யில் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்​காமல் விட்ட விவ​காரத்​தில் திமுக மீது இன்​னும் அதிருப்தி அடைந்​தார்.

தலைசிறந்த நாடாளு​மன்​ற​வா​தி​யான வைகோவை மீண்​டும் மாநிலங்​களவைக்கு அனுப்ப திமுக முன்​வர​வில்​லை. கமலுக்கு வாய்ப்​பளித்து வைகோ-வுக்கு வாய்ப்​பளிக்க மறுத்​ததன் மூலம் திமுக தங்​களை உதாசீனம் செய்​து​விட்​ட​தாக துரை வைகோ ஆதங்​கப்​பட்​டார். அதனால் தான், “வை​கோவுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​காதது தங்​களுக்கு வருத்​தமே” என வெளிப்​படை​யாகப் பேசி​னார். மதி​முக-வுடன் பாஜக, கூட்​டணி விஷய​மாக பேசி​யதா இல்​லையா என்​பதை வைகோ​விட​மும் துரை வைகோ​விட​மும் கேட்​டால் தான் தெரி​யும். ஒரு​வேளை, அப்​படி பேச்​சு​வார்த்தை நடத்தி இருந்​தால் அதற்​கான காரணங்​களாக இவை எல்​லாம் தான் இருக்க முடி​யும்” என்​றார்​கள்.

மதி​முக தலைமை திமுக-வுடன் மனக்​கசப்​பில் இருப்​ப​தைப் புரிந்து கொண்டு பாஜக சமயம் பார்த்து தூண்​டில் வீசி இருப்​ப​தாக​வும், தங்கள் கூட்​ட​ணிக்கு மதி​முக வர சம்​ம​தித்​தால் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் தரு​வது குறித்​தும் பேசலாம் என்று ஆஃபர் தந்​திருப்​ப​தாக​வும் பலவாறாக செய்​தி​கள் கசிகின்​றன.

இதுகுறித்து மத்​திய மண்டல திமுக நிர்​வாகி​கள் சிலரிடம் பேசி​ய​போது, “மக்​கள​வைத் தேர்​தலில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிடு​வதை துரை வைகோ விரும்​பா​விட்​டாலும், அவரை சுமார் 3 லட்​சம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற வைத்​தார் அமைச்​சர் கே.என்​.நேரு. அதே​போல், கூட்​ட​ணிக் கட்​சிகள் என்​ன​தான் குடைச்​சல் கொடுத்​தா​லும் கூட்​டணி குலைந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக பொறுமை காக்​கி​றார் தலை​வர் ஸ்டா​லின். காரணம், 2021-ல் மிகக் குறைந்த வாக்கு சதவீத வித்​தி​யாசத்​தில் தான் அதி​முக-​விடம் இருந்து ஆட்​சியை கைப்​பற்​றியது திமுக. அதனால், சிறு சிறு கட்​சிகளும் நமக்​குத் தேவை என நினைக்​கி​றார் ஸ்டா​லின்.

குறைந்​த​பட்​சம் 8 முதல் 10 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டால் தான் அங்​கீ​காரம் பெற முடி​யும் என நினைக்​கி​றார் துரை வைகோ. ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் அதற்​கான வாய்ப்பு இப்​போது இல்​லை. ஒரு​வேளை, பாஜக கூட்​ட​ணி​யில் அவர்​களுக்கு அந்த வாய்ப்​புக் கிடைக்​கலாம். இதனால் கூட அவர்​கள் பாஜக தரப்​பில் பேசி இருக்​கலாம்.

2006-ல் திருச்சி திமுக மாநாட்​டில் கலைஞருடன் கலந்​து​கொள்ள இசைவு தெரி​வித்​திருந்த வைகோ, மாநாடு கூடிய அதே நாளில், போயஸ் கார்​டனில் ஜெயலலி​தாவை சந்​தித்​துப் பேசி அதி​முக கூட்​ட​ணிக்கு அச்​சா​ரம் போட்​டார். ஆக, மதி​முக இதற்கு முன்​பும் பல நேரங்​களில் மாற்றி யோசித்​திருக்​கிறது. அது​போல இப்​போதும் அவர்​கள் பாஜக-வுடன் கூட்​டணி பேசுவது உண்​மை​யாக இருக்​கு​மா​னால், போகவேண்​டாம்​... இருங்​கள் என பிடித்து இழுக்​கும் நிலையில் திமுக இல்​லை” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x