Published : 19 Jun 2025 05:56 AM
Last Updated : 19 Jun 2025 05:56 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை / தூத்துக்குடி: திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. கோயில் திருப்​பணி​களுக்​காக அமைக்​கப்​பட்ட குழு​வில் ஆகம நிபுணர்​கள் இடம் பெற​வில்​லை. கடலோர கட்​டுப்​பாட்டு மண்​டலத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் உரிய அனு​மதி பெறாமல் கட்​டிடங்​கள்கட்​டப்​பட்​டுள்​ளன.

கோயிலில் 24 புனித தீர்த்​தங்​களில் நாழிக்​கிணறு என்ற தீர்த்​தம் மட்​டுமே தற்​போது உள்ளது. தீர்த்​தங்களின் பெயர்​களை குறிப்பிட்டு கல் தூண்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இந்த தூண்​கள் கோயில் திருப்​பணி​களின்​போது மறைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த கல் தூண்​களை மீண்​டும் நிறுவ வேண்​டும். கும்​பாபிஷேகத்​தின்​போது ஹெலி​காப்​டரில் மலர் தூவும் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ளது. இதனால் கும்​பாபிஷேகத்​தின்​போது கருடன் வரு​வ​தில்​லை. ஹெலி​காப்​டரில் மலர் தூவும் நிகழ்​வுக்கு கோயில் நிதி செல​விடப்​படு​வது தவறு.

கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு ஆகம நிபுணர்​கள் குழுஅமைக்​க​வும், 24 தீர்த்த தூண்களை மீண்​டும் அமைக்​க​வும், அது​வரை திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபி ஷேகம் நடத்த தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது.

அறநிலை​யத் துறை தரப்​பில், “கும்​பாபிஷேகம் மற்​றும் திருப்​பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதை கண்​காணிக்க நீதி​மன்ற உத்தர​வின்​படி ஆகம நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்ளது” எனத் தெரிவிக்​கப்​பட்​டது. மனுதா​ரர் தரப்​பில், “கும்​பாபிஷேகத்​தின்​போது ஹெலி​காப்​டர் மூலம் மலர்​கள் தூவ அல்​லது புனித நீர் ஊற்​று​வது ஆகம விதி​களுக்கு எதி​ரானது” என வாதிடப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “நிம்மதி தேடி கோயிலுக்கு வரும் ஏழை பக்​தர்​கள் ஏமாற்​றப்​படு​கிறார்​கள். அவர்​களுக்கு குடிநீர், கழிப்​பறை போன்ற அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​படு​வ​தில்​லை. முதலில் அதற்கு தீர்வு காண வேண்​டும். திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேக விவ​காரத்​தில் ஏற்​கெனவே நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் நிபுணர் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. மனு​தா​ரர் தேவையெனில் இந்து சமய அறநிலை​யத் துறை இணை ஆணை​யரிடம் மனு அளிக்​கலாம். இந்த மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது’’ என உத்​தர​விட்​டனர்.

பிரம்மாண்ட யாகசாலை: இதற்கிடையே கும்பாபிஷேக விழாவை யொட்​டி, விமான தளத்​தில் உள்ள மூல​வர், சண்​முகர், வள்​ளி, தெய்​வானை, பெரு​மாள்,நடராஜர் விமானக் கலசங்​களில் தங்​கத் தகடு​கள் பதிக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

ராஜகோபுரத்​தின் கீழ்​பகு​தி​யில் பிரம்​மாண்ட யாக​சாலை அமைக்​கப்​படுகிறது. ஜூலை 1-ம் தேதி யாக​சாலை பூஜைகள் தொடங்குகின்​றன.திருச்​செந்​தூர் கோயில் கும்பாபிஷேக நன்​னீ​ராட்டு விழாவை தமிழில் நடத்த வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மற்​றும் பல்​வேறு அமைப்​பினர் கோரிக்கை விடுத்து வரு​கின்றனர்.

இந்​நிலை​யில், கோயில் நிர்​வாகம் சார்​பில் நேற்று வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில், “திருச் செந்​தூர் கோயி​லில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் திருக்​குட நன்​னீ​ராட்டு விழாநடை​பெறவுள்​ளது. இதற்காக 8 ஆயிரம் சதுரடி​யில் 76 ஹோமகுண்​டங்​களு​டன் பிரம்​மாண்ட வேள்​விச்சாலை அமைக்​கப்​படு​கிறது.

வேள்​வி​ச்சாலை வழி​பாடு நாட்​களில் வேத​பா​ராயணம், திருமுறை விண்​ணப்​பம், நாகஸ்வர இன்னிசை நடை​பெறும். காலை 7 முதல் மதி​யம் 1 மணி வரை மற்​றும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரை 64 ஓது​வார் மூர்த்​தி​களைக் கொண்டு பன்​னிரு திரு​முறை​கள், திருப்​பு​கழ், கந்​தர் அனுபூதி முதலான செந்​தமிழ் வேதங்​கள் முற்​றோதுதல் நடை​பெறும்” என கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x