Published : 19 Jun 2025 04:49 AM
Last Updated : 19 Jun 2025 04:49 AM

ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகள், அலுவலகங்களில் கைப்பற்றிய மின்னணு சாதனங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்: அமலாக்கத் துறை

சென்னை: ​திரைப்​படத் தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட மின்​னணு சாதனங்​கள் மீண்​டும் அவர்​களிடமே திருப்பி ஒப்​படைக்​கப்​படும் என அமலாக்​கத்​துறை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது.

டாஸ்​மாக்​கில் நடை​பெற்ற முறை​கேடு​கள் தொடர்​பாக அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் திரைப்​படத் தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திப​ரான விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தினர். பின்​னர் விக்​ரம் ரவீந்​திரனின் வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைத்​தனர். அமலாக்​கத்​துறை​யின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நீதிப​தி​கள் எம்​.எஸ்​. ரமேஷ், எல். லட்​சுமி​நா​ராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் இரு​வருக்​கும் எதி​ரான ஆதா​ரங்​களை தாக்​கல் செய்ய அமலாக்​கத்​துறைக்கு நீதிப​தி​கள் அறி​வுறுத்​தினர். மேலும் எந்த அதி​காரத்​தின் அடிப்​படை​யில் வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைக்​கப்​பட்​டது என்​றும் கேள்வி எழுப்​பி​யிருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அமலாக்​கத்​துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ரமேஷ் இரு​வருக்​கும் எதி​ரான ஆதா​ரங்​களை தாக்​கல் செய்​தார். மேலும் அமலாக்​கத்​துறை தரப்​பில் காணொலி​யில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ராஜூ, சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின்​கீழ் சட்​ட​விரோத​மாக பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ளது என்​பதை நம்​புவதற்கு உரிய காரணங்​கள் இருந்​தாலோ அல்​லது சந்​தேகித்​தாலோ சோதனை நடத்​தலாம், என்​றார்.

அமலாக்​கத்​துறை​யின் அறிக்​கையை படித்​துப் பார்த்த நீதிப​தி​கள், இந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்ள ஆதா​ரங்​களுக்​கும், கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் முன்​வைக்​கும் வாதங்​களுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைக்க அதி​காரம் உள்​ளதா என மீண்​டும் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு அமலாக்​கத்​துறை தரப்​பில், சீல் வைக்க அதி​காரம் இல்லை என்​றாலும் பூட்​டிய வீடு மற்​றும் அலு​வல​கத்தை உடைத்து சோதனை நடத்​தும் அதி​காரம் அமலாக்​கத்​துறைக்கு உள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது, என தெரிவிக்​கப்​பட்​டது.

மேலும், விக்​ரம் ரவீந்​திரனின் வீடு மற்​றும் அலு​வல​கத்​தில் ஒட்​டப்​பட்​டுள்ள நோட்​டீஸ் திரும்​பப்​பெறப்​பட்​டு, மனு​தா​ரர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட மின்​னணு சாதனங்​கள் அவர்​களிடமே திருப்பி ஒப்​படைக்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டது.

அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிப​தி​கள், மனு​தா​ரர்​களான ஆகாஷ் பாஸ்​கரன், விக்​ரம் ரவீந்​திரன் தாக்​கல் செய்​திருந்த மனுக்​கள் மீதான இடைக்​கால உத்​தரவை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​தனர். மேலும் இந்த பிர​தான வழக்​கில் அமலாக்​கத்​துறை 4 வார காலங்​களில் பதில் மனு​தாக்​கல்​ செய்​ய உத்​தர​விட்​டு வழக்​கை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x