Published : 19 Jun 2025 04:40 AM
Last Updated : 19 Jun 2025 04:40 AM

ஓய்வூதிய பலன்கள் துரிதமாக வழங்க வழிகாட்டுதல்கள்

சென்னை: ஓய்​வூ​தி​யப் பலன்​களை உடனடி​யாக வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: ஓய்​வூ​திய பலன்​கள் வழங்குவதில் தாமதம் இருந்​து​வரு​வ​தாக தெரி​கிறது. இந்த கால​தாமதத்தை தவிர்க்​கும் வகை​யில் வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்​கள், அலு​வலர்​களின் பணிக்​காலத்​துக்கு அகத்​தணிக்கை உடனே மேற்​கொள்​ளப்பட வேண்​டும். தணிக்கை பெற்ற நிலை​யில் ஓய்வு பெற்​றவர்​கள் மீது தனிப்​பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை ஏது​மில்லை என்ற நிலை​யில் அவர்​களுக்கு உடனே 30 நாட்​களுக்​குள் அனைத்து பலன்​களும் வழங்​க வேண்​டும்.

தணிக்​கைத் தடைகள் காரண​மாக ஓய்வு பெற்​றவர்​களுக்கு விடுவிக்​கப்பட வேண்​டிய பலன்​களை நிறுத்தி வைக்​கக்​கூடாது. ஒழுங்கு நடவடிக்கை உள்​ளிட்ட பிற இனங்​களில் நிலுவை ஏதேனும் இருந்​தால் அதன் அடிப்​படை​யில் தொடர் நடவடிக்கை மேற்​கொள்​ள அறி​வுறுத்​தப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x