Last Updated : 17 Jun, 2025 08:29 AM

 

Published : 17 Jun 2025 08:29 AM
Last Updated : 17 Jun 2025 08:29 AM

காங்கிரஸுக்கு குடுக்காதீங்கோ..! - கோவை தெற்கு தொகுதிக்காக கொடிபிடிக்கும் திமுக!

வானதி சீனி​வாசன், கமல்​ஹாசன், மயூரா எஸ்​.ஜெயக்​கு​மார்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தற்போது அதிமுக கூட்டணி தன்வசத்தில் வைத்திருக்கிறது. இந்த பத்திலும் இம்முறை திமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் உட்கார வைத்திருக்கிறது திமுக தலைமை. பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியையும் இம்முறை கட்டாயம் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதும் செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டுள்ள முக்கியமான அசைன்மென்ட் என்கிறார்கள்.

தொண்​டா​முத்​தூர் தொகு​தி​யில் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான இழுப்பு வேலை​களை செந்​தில் பாலாஜி ஏற்​கெனவே தொடங்​கி​விட்ட நிலை​யில், கோவை தெற்​கில் இம்​முறை திமுக-வே போட்​டி​யிட வேண்​டும் என்ற கோரிக்​கையை முன்​வைக்க ஆரம்​பித்​திருக்கிறார்​கள் உடன்​பிறப்​பு​கள். கடைசி​யாக 2011-ல் கோவை தெற்​கில் திமுக போட்​டி​யிட்​டது. அப்​போது இங்கு களம்​கண்ட முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் பழனி​சாமி, அதி​முக-​வின் சேலஞ்​சர் துரை​சாமி​யிடம் தோற்​றுப் போனார். இதனால், 2016, 2021 தேர்​தல்​களில் இந்​தத் தொகு​தியை காங்​கிரஸ் கட்​சிக்கு கொடுத்​து​விட்டு ஒதுங்​கிக் கொண்​டது திமுக. இந்த இரண்டு தேர்​தல்​களி​லுமே காங்​கிரஸ் கட்​சி​யின் அகில இந்​திய செய​லா​ள​ரான மயூரா எஸ்​.ஜெயக்​கு​மார் இங்கு போட்​டி​யிட்​டார். இரண்டு முறை​யும் அவரால் கரை சேர​முடிய​வில்​லை.

கடந்த தேர்​தலில் வானதி சீனி​வாசனிடம் தோற்​றுப் போன மயூ​ரா, மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் இரண்​டா​மிடத்தை தொட்​ட​தால் மூன்​றாமிடத்​துக்கு தள்​ளப்​பட்​டார். இந்த நிலை​யில், மீண்​டும் கோவை தெற்​கில் உதயசூரியன் போட்​டி​யிட வேண்​டும் என திமுக-​வினர் தலை​மைக்கு அழுத்​தம் கொடுக்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். மாவட்ட துணைச் செய​லா​ளர் கோட்டை அப்​பாஸ், பொதுக்​குழு உறுப்​பினர் மு.ம.ச.​முரு​கன் உள்​ளிட்​டோர் கோவை தெற்கை குறி​வைத்து ஆயத்​தப் பணி​களை செய்ய ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்​வாகி​கள் சிலர், “2021-ல் மாநிலம் முழு​வதும் திமுக ஆதரவு அலை வீசி​யது. அப்​போது கோவை தெற்​கிலும் திமுக-வே போட்​டி​யிட விரும்​பியது. ஆனால், காங்​கிரஸ் தலைமை குறிப்​பிட்​டுக் கேட்​ட​தால் தொகு​தியை காங்​கிரஸுக்கு விட்​டுத்தர வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது. ஆனால், தொகு​தியை கேட்டு வாங்​கிய​வர்​கள் வேட்​பாளரை ஜெயிக்​கவைக்க மெனக்​கிட​வில்​லை. அதனால், மயூரா ஜெயக்​கு​மார் மூன்​றாமிடத்​துக்​குப் போனார். ஒரு​வேளை, இங்கு திமுக போட்​டி​யிட்​டிருந்​தால் வானதி சீனி​வாசன் வந்தே இருக்​க​மாட்​டார்.

காங்​கிரஸின் பிசுபிசுத்​துப் போன பிரச்​சார அணுகு​முறை, சொந்​தக் கட்​சிக்​குள்​ளேயே நடந்த உள்​ளடி வேலை​கள், மயூ​ராவை பிடிக்​காத திமுக-​வினர் திசை​மாறி கமல்​ஹாசனுக்கு வாக்​களித்​தது போன்ற காரணங்​களால் மயூரா மூன்​றாமிடத்​துக்கு போனார். இந்த நிலை​யில், இம்​முறை​யும் தொகு​தியை காங்​கிரஸுக்கு கொடுத்​தால் மீண்​டும் மயூரா தான் வேட்​பாள​ராக வரு​வார். அப்​படி நடந்​தால் பழைய வரலாறே திரும்​பக் கூடும். அப்​படி ஏதும் நடந்​து​விடக் கூடாது என்​ப​தால் தான் தொகு​தியை திமுக-வுக்கு ஒதுக்​கச் சொல்லி தலை​மையை இப்​போதே வலி​யுறுத்த ஆரம்​பித்​திருக்​கி​றோம்” என்​றார்​கள்.

இதுகுறித்து மயூரா எஸ்.ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, “காங்கிரஸுக்கான தொகுதிகள் எண்ணிக்கை முடிவான பிறகு தான் எந்தெந்த தொகுதிகள் என முடிவாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவர். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக கமிட்டி போடப்படும். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை நாங்கள் கேட்போம். அதை ஒதுக்குவது குறித்து திமுக முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. எனவே, இந்தத் தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்று இப்போதே நாங்கள் கூற முடியாது. கோவை தெற்கு உள்ளிட்ட கோவையில் எந்தத் தொகுதியையும் திமுக-வினர் எதிர்பார்ப்பது அவர்களின் உரிமை. அதை நான் குறை சொல்ல முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x