Published : 14 Jun 2025 04:41 AM
Last Updated : 14 Jun 2025 04:41 AM

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் இடம்: பெ.சண்முகம் நம்பிக்கை

திருவள்ளூர்: வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு கூடு​தல் இடம் திமுக வழங்​கும் என, அக்​கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் நம்பிக்கை தெரி​வித்​துள்​ளார். மத்​திய பாஜக அரசின் பல்​வேறு செயல்​பாடு​களுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், மக்​கள் நலன் சார்ந்த திட்​டங்​களை தமிழக அரசு செயல்​படுத்த வலி​யுறுத்​தி​யும் தமிழகத்​தில் கடந்த 11-ம் தேதி முதல், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் மக்​கள்சந்​திப்பு பிரச்​சார இயக்​கம் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி திரு​வள்​ளூர் மாவட்​டம், தாமரைப்​பாக்​கத்​தில் நேற்று நடந்தது.

இதில், கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், மாநிலக் குழு உறுப்​பினர் ஐ.ஆறு​முகந​யி​னார், மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.கோ​பால், மாவட்ட செயற்​குழு உறுப்​பினர்​களான டி.பன்​னீர்​செல்​வம், ஜி.சம்​பத், ஏ.ஜி.கண்​ணன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் பெ.சண்​முகம் தெரி​வித்​த​தாவது: அகம​தா​பாத் விமான விபத்​தில் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​க​வும், காயமடைந்த மருத்​து​வக்​கல்​லூரி மாணவர்​கள் உள்​ளிட்​டோருக்கு உயர்தர சிகிச்சை வழங்​க​வும் மத்​திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்​கவேண்​டும். விபத்து தொடர்​பாக நேர்​மை​யான நீதி விசா​ரணை நடத்​தப்​பட​ வேண்​டும்.

ஜூன் 22-ம் தேதி மதுரை​யில் முருக பக்​தர்​கள் மாநாடு என்ற பெயரில் அரசி​யல் மாநாடு நடை​பெறவுள்​ளது. அதைப் புரிந்து கொண்​டு, உண்​மை​யான முருக பக்​தர்​கள் அந்த மாநாட்​டைப் புறக்​கணிக்க வேண்​டும். பாஜக - அதி​முக ஒரு சந்​தர்ப்​ப​வாத கூட்​ட​ணி. இதை தமிழக மக்​கள் ஆதரிக்க மாட்​டார்​கள். தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கூடு​தலான தொகு​தி​களில், போட்​டி​யிட்​டு, கூடு​தல் உறுப்​பினர்​கள் சட்​டப்​பேர​வைக்கு செல்​ல​வேண்​டும் என முடிவு எடுத்​துள்​ளோம்.

கூடு​தல் இடத்தை கண்​டிப்​பாக திமுக ஒதுக்​கும். திமுக ஏற்​கெனவே ஆட்சி அமைத்​ததற்​கும், திரும்ப ஆட்சி தொடர்​வதற்​கும் அடிப்​படை​ கூட்​டணி பலம்​தான். ஆகவே, கூட்​டணி கட்​சிகளை ஒற்​றுமை​யாக அரவணைப்​பது மூல​மாகத்​தான் தி​முக ஆட்சி 2026-ல் அமை​யும். அதற்கு குந்​தகம் விளைவிக்​கும் நடவடிக்​கை​யில்​ தி​முக ஈடு​ப​டாது.
இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x