Last Updated : 12 Jun, 2025 08:41 AM

 

Published : 12 Jun 2025 08:41 AM
Last Updated : 12 Jun 2025 08:41 AM

விட்டதை பிடிக்க வரும் வீரமணி... விட்டால் போதும் என ஓடும் தேவராஜி? - ஜோலார்பேட்டையில் ஜொலிக்கப் போவது யார்?

2021 தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக அமைச்சர்களில் முக்கிய மானவர் கே.சி.வீரமணி. ஜோலார்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற வீரமணி, இரண்டு முறையும் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். அந்த செல்வாக்கில் கடந்த முறையும் இங்கு போட்டியிட்டார். ஆனால், மு.க.ஸ்டாலினே இங்கு வந்து போட்டியிட்டாலும் வீரமணியை வீழ்த்துவது கடினம் என்று சொல்லப்பட்ட நிலையில், வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜியிடம் தோற்றுப் போனார் வீரமணி.

தொகுதி முழு​வதும் உறவினர்​கள், நண்​பர்​கள் என செல்​வாக்​கான மனித​ராக வலம் வந்த கே.சி.வீரமணி​யின் அரசி​யல் செல்​வாக்கு ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு கொஞ்​சம் சரிய ஆரம்​பித்​தது. இருந்த போதும் நம்​பிக்​கையோடு கடந்த தேர்​தலில் வாக்குக் கேட்​டார். திருப்​பத்​தூர் மாவட்ட அதி​முக செய​லா​ள​ரான இவரை எதிர்த்து தொகு​திக்கு புதி​ய​வ​ரான வாணி​யம்​பாடி வட்டத்​தைச் சேர்ந்த திருப்​பத்​தூர் மாவட்ட திமுக செய​லா​ளர் க.தேவ​ராஜியை களமிறக்​கியது திமுக.

அமைச்​சரை தோற்​கடித்​தால் அமைச்​சர் ஆகலாம் என்ற நம்​பிக்​கை​யில் கிரா​மங்​களில் கூட வீதி வீதி​யாகச் சென்று வாக்​குக் கேட்​டார் தேவ​ராஜி. இரண்டு முறை ஜெயித்​தவர் என்​ப​தால் வீரமணி மீது மக்​களுக்கு இருந்த அதிருப்​தி​யும் தேவ​ராஜிக்கு சாதக​மாக இருந்​தது. ஆனாலும், இவரை சாதா​ரண​மாக எடை​போட்ட வீரமணி, “இந்​தத் தொகு​திக்கு நான் எண்​ணிலடங்கா திட்​டங்​களைக் கொண்டு வந்​திருக்​கிறேன்.

அதனால் என்னை வெல்ல இன்​னொருத்​தன் பிறந்து தான் வரணும்” என்று அதீத நம்​பிக்​கை​யில் கூடு​தல் தெம்​பாகவே இருந்​தார். கடைசி​யில், சொற்ப வாக்​கு​களில் வீரமணி தோற்​றுப் போன போது அவர் மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த திருப்​பத்​தூர் மாவட்ட அதி​முக-வே திகைத்​துப் போய் நின்​றது.

இதையடுத்து “இத்​தனை செய்​தும் இந்த மக்​கள் நம்மை அங்​கீகரிக்​க​வில்​லை​யே... இவர்​களை புரிஞ்​சுக்​கவே முடியலை​யேப்​பா” என புலம்​பித் தவித்த வீரமணி, தனது தீவிர அரசி​யல் நடவடிக்​கை​களைக்​கூட சற்றே குறைத்​துக் கொண்​டார். இந்த நிலை​யில், இப்​போது தேர்​தல் வரு​கிறது என்​றதும் மீண்​டும் தனது பிரி​யத்​துக்​குரிய ஜோலார்​பேட்டை தொகு​தியை வலம் வர ஆரம்​பித்​திருக்​கி​றார். அதி​முக மட்​டுமல்​லாது பிற கட்​சி​யினர் நடத்​தும் நிகழ்ச்​சிகளி​லும் தவறாமல் பங்​கெடுக்​கும் வீரமணி, தெரிந்​தவர்​கள், உறவினர்​கள், நண்​பர்​கள் வீட்டு விஷேசங்​களி​லும் தட்​டா​மல் ஆஜராகி பழைய உறவை புதுப்​பித்து வரு​கி​றார்.

வீரமணி மீண்​டும் களத்​துக்கு வந்​திருப்​பது சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான தேவ​ராஜிக்கு உள்​ளுக்​குள் சற்றே கிலியை உண்​டாக்கி இருப்​ப​தாக அவருக்கு நெருக்​க​மான​வர்​கள் சொல்​கி​றார்​கள். மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்​தும் கடந்த முறையே தட்​டுத் தடு​மாறி தொகு​தியை வென்ற தேவ​ராஜி இம்​முறை​யும் வீரமணியை எதிர்த்து ஜோலார்​பேட்​டை​யில் நின்​றால் கரை ஏறு​வது கஷ்டம் தான் என திமுக-​வினரே பேச ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

இதை உள்​வாங்கி இருக்​கும் தேவ​ராஜி, இம்​முறை ஜோலார்​பேட்​டையை விட்​டு​விட்டு தனது சொந்​தத் தொகு​தி​யான வாணி​யம்​பாடி​யில் போட்​டி​யிடும் முடிவுக்கு வந்​திருப்​ப​தாக அவருக்கு நெருக்​க​மான​வர்​கள் சொல்​கி​றார்​கள். தனது இந்த விருப்​பத்தை தலை​மை​யிடம் அரசல் புரசலாக அவர் சொன்​ன​தாக​வும், “வீரமணியை எதிர்த்து நீங்​கள் நிற்​கா​விட்​டால் வேறு யார் நிற்​பது? அதி​முக மாவட்​டச் செய​லா​ளரை எதிர்த்து திமுக மாவட்​டச் செய​லா​ளர் தான் போட்​டி​யிட வேண்​டும்.

அதற்​கான வேலை​களைப் போய்ப் பாருங்​கள்” என தலை​மை​யில் சொன்​ன​தாக​வும் ஜோலார்​பேட்டை தொகு​திக்​குள் ஒரு செய்தி வட்​டமடிக்​கிறது. அதேசம​யம், கே.சி.வீரமணியை எதிர்த்து நிற்க தேவ​ராஜி தயக்​கம் காட்​டி​னால் நாங்​கள் வீரமணியை எதிர்த்து நிற்​கத் தயார் என திமுக ஒன்​றிய செய​லா​ளர்​கள் சிலர் திமுக தலை​மைக் கழக நிர்​வாகி​களிடம் சொல்லி இருப்​பதும் தேவ​ராஜி வட்​டாரத்தை கலக்​கமடைய வைத்​திருக்​கிறது.

இதனிடையே, விட்​டதைப் பிடிக்க வேண்​டும் என்​ப​தில் தீர்​மான​மாக இருக்​கும் கே.சி.வீரமணி, இம்​முறை எந்த ‘லெவலுக்​கும்’ இறங்கி அடிக்க தயா​ராய் இருக்​கி​றார் என்று திமுக-​வினரின் வயிற்​றில் அதி​முக-​வினரும் புளியைக் கரைத்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள். இதையெல்​லாம் எப்​படி சமாளிக்​கப் போகிறீர்​கள் என க.தேவ​ராஜியின் மகனும் மாவட்ட மாண​வரணி அமைப்​பாள​ரு​மான பிர​பாகரனிடம் கேட்​டதற்​கு, “கடந்த முறையே வாணி​யம்​பாடி அல்​லது ஜோலார்​பேட்டை தொகு​தி​யில் போட்​டி​யிடத்​தான் அப்பா விருப்​பம் தெரி​வித்​தார்.

கட்சி தலைமை ஜோலார்​பேட்டை தொகு​தியை ஒதுக்​கியது. அதில் வெற்​றி​ பெற்று தொகுதி மக்​களுக்கு செய்ய வேண்​டியதை எல்​லாம் நல்​ல​முறை​யில் செய்து வரு​கி​றோம். அதே​போல் இந்த முறை​யும் அதே இரண்டு தொகு​தி​களில் ஏதாவது ஒன்​றில் வாய்ப்​புக் கொடுங்​கள் என்று கேட்​டிருக்​கி​றோம். தலைமை எங்​களுக்கு எந்​தத் தொகு​தியை ஒதுக்​கு​கிறதோ அதில் நிச்​ச​யம் வெற்​றி​பெறு​வோம். மற்​றபடி, யாருக்​காக​வும் பயந்து கொண்டு தொகுதி மாற வேண்​டிய அவசி​யம் எங்​களுக்கு இல்​லை. இம்​முறை​யும் ஜோலார்​பேட்​டையையே ஒதுக்​கி​னாலும் அதி​லும் நிச்​ச​யம் வெற்றி பெறு​வோம் என்​ப​தில் எந்த சந்​தேகமும் இல்​லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x