Published : 09 Jun 2025 04:38 AM
Last Updated : 09 Jun 2025 04:38 AM
சென்னை: மின்வாரிய கள பணியாளர்களுக்கு ரூ.1.59 கோடியில் சிறப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மின்தடை உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்யும் கள பணியாளர்கள் சில நேரங்களில் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு செயலி மூலம் அவர்களது செயல்பாடுகளை மின்வாரியம் கண்காணிக்கிறது. இருப்பினும், எதிர்பாராதவிதமாக சூழல்களில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன. இதில் பெரும்பாலும் கேங்மேன் எனும் தற்காலிக ஊழியர்களே பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை தடுக்கும் விதமாக, பணியாளர்களுக்கு சீரிய முறையில் பாதுகாப்பு பயிற்சி வழங்க வேண்டும் என மின்வாரிய தலைவரிடம் பிஎம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விபத்தின்றி பாதுகாப்பாக பணியாற்றுவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்தை சேர்ந்த 24 ஆயிரம் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான செலவினமாக ரூ.1.59 கோடியை ஒதுக்க வாரியம் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT