Published : 07 Jun 2025 04:47 AM
Last Updated : 07 Jun 2025 04:47 AM
சென்னை: தமிழகத்தில் சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையரைக் கொண்ட 23 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.23 லட்சம், 227 முதியோர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2.27 கோடி மற்றும் 95 மாற்றுத் திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.95 லட்சம் என மொத்தம் 345 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்துக்காக வழங்கப்படும் வாழ்வாதார நிதியை முறையாக பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT