Published : 06 Jun 2025 08:20 AM
Last Updated : 06 Jun 2025 08:20 AM

இவர்கள் சேர்ந்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை! - நேரு விழாவை புறக்கணித்த மகேஸ் ஆதரவாளர்கள்

திமுக தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் பிரதானமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இது அப்பட்டமாகவே தெரிந்தது.

ஒரு காலத்​தில் திருச்சி மாவட்ட திமுக என்​றால் அது கே.என்​.நேரு​வின் முக​மாக மட்​டுமே இருந்​தது. ஒன்​று​பட்ட திருச்சி மாவட்​டத்​துக்கே செய​லா​ள​ராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்​ணசை​வில் வைத்​திருந்​தார். அதன் பிறகு அன்​பில் மகேஸ் அவருக்​குப் போட்​டி​யாக மாவட்ட திமுக-​வில் தலை​தூக்க ஆரம்​பித்​தார். இதனால் நேருவை பிடிக்​காதவர்​கள் எல்​லாம் மகேஸ் பக்​கம் அணிவகுத்​தார்​கள். மகேஸ் தலை​மைக்கு நெருக்​க​மான பிள்​ளை​யாக இருந்​த​தால் அவரது வளர்ச்​சியை நேரு​வால் தடுத்து நிறுத்த முடிய​வில்​லை. அதேசம​யம் கள வீர​ரான நேரு​வை​யும் தலை​மை​யால் ஒதுக்கி வைக்கவும் முடிய​வில்​லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு மேனியாய் வளர ஆரம்​பித்​தது.

ஒரு கட்​டத்​தில் நேரு திமுக-​வின் முதன்​மைச் செய​லா​ளர் அந்​தஸ்​துக்கு உயர்ந்​த​தால் தலை​மைக்​கழக நிர்​வாகி​களில் ஒரு​வ​ரா​னார். அதே​போல் திருச்சி மாவட்ட திமுக மூன்​றாக பிரிக்​கப்​பட்டு தெற்கு மாவட்​டத்​துக்கு அன்​பில் மகேஸ் செய​லா​ள​ரா​னார். கூட​வே, தேர்​தலில் வெற்​றி​பெற்று நேரு​வுக்கு நிக​ராக அமைச்​சரும் ஆனார். இப்​போது திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகேஸ் கட்​டுப்​பாட்​டில் இருப்​பது போல் வடக்கு மற்​றும் மத்​திய மாவட்​டங்​கள் நேரு​வின் மறை​முக கட்​டுப்​பாட்​டில் இருக்​கின்​றன.

நேரு தலை​மைக் கழக நிர்​வாகி​யாகி​விட்​ட​தால் இனி திருச்சி திமுக முழு​மை​யாக மகேஸ் கட்​டுப்​பாட்​டுக்​குள் போய்​விடும் என பலரும் எதிர்​பார்த்​தார்​கள். ஆனால், அப்​படி நடக்​காமல் திருச்சி வடக்​கு, மற்​றும் மத்​திய மாவட்​டங்​களை தனது பிடிக்​குள் வைத்​துக்​கொண்​டார் நேரு. இந்த நிலை​யில், நேரு​வுக்​கும் மகேஸுக்​கும் இடை​யில் தூபம் போட்​டு​விட்டு அதில் சிலர் குளிர்​காய​வும் ஆரம்​பித்​தனர். இதனால், கோஷ்டி பூசல் உச்​சமடைந்து ஒரு தரப்​பினரின் திருமண நிகழ்​வு​களுக்​குக் கூட மற்​றொரு தரப்பு போவ​தில்லை என்ற நிலை உரு​வானது.

இந்த விவ​காரமெல்​லாம் திமுக தலைமை வரைக்​கும் எட்​டியதை அடுத்​து, இரண்டு தரப்​பும் சமா​தானம் செய்து வைக்​கப்​பட்​டார்​கள். இதன் பிறகு நிலைமை கொஞ்​சம் மாறியது. வடக்கு மற்​றும் மத்​திய மாவட்ட விவ​காரங்​களில் தலை​யிடு​வதை மகேஸும் தெற்கு மாவட்ட விவ​காரங்​களில் தலை​யிடு​வதை நேரு​வும் தவிர்த்​துக் கொண்​டார்​கள். ஆனாலும், கோஷ்டி அரசி​யல் நடத்​தியே பலன் கண்ட இரு​வரது ஆதர​வாளர்​களும் வெறுப்பு நெருப்பை அணைய விடு​வ​தாக இல்​லை.

இந்த நிலை​யில், அமைச்​சர் நேரு​வின் சொந்​தத் தொகு​தி​யான திருச்சி மேற்​கில் உள்ள எடமலைப்​பட்​டிபுதூரில் கட்​டி​முடிக்​கப்​பட்ட மாநக​ராட்சி உயர்​நிலைப் பள்ளி கட்​டிட திறப்பு விழா கடந்த 4-ம் தேதி நடை​பெற்​றது. அமைச்​சர்​கள் நேரு​வும் மகேஸும் கலந்து கொண்ட இந்த விழாவை துணை மேயர் திவ்யா உள்​ளிட்ட அன்​பில் மகேஸின் ஆதர​வாளர்​கள் ஒட்​டுமொத்​த​மாக புறக்​கணித்து விட்​டார்​கள். திவ்யா தெற்கு மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் என்​பது கவனிக்க வேண்​டிய விஷ​யம். மகேஸ் ஆதர​வாளர்​களில் மாநகரச் செய​லா​ளர் மதி​வாணன் மட்​டும் கலந்து கொண்​டார். மாநக​ராட்சி சம்​பந்​தப்​பட்ட இந்த விழா​வில் மகேஸ் ஆதரவு மாமன்ற உறுப்​பினர்​களும் மிஸ்​ஸிங்.

மகேஸின் ஆதர​வாளர்​கள் இப்​படி ஒட்​டுமொத்​த​மாக விழாவை புறக்​கணித்த நிலை​யில், அமைச்​சர் நேருவோ தனது சொந்த செல​வில் ரூ.1.5 லட்​சம் மதிப்​பிலான வெள்ளி வீர​வாளை அமைச்​சர் அன்​பில் மகேஸூக்கு பரி​சாக அளித்​து, நாங்​கள் எங்​களுக்​குள் சரி​யாகத்​தான் இருக்​கி​றோம் என்று குறிப்​பால் உணர்த்​து​வது போல் உணர்த்​தி​னார்.

இதுகுறித்து அமைச்​சர் நேரு​விடம் கேட்​டதற்​கு, “எனது தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​யில் பிரம்​மாண்​ட​மான பள்​ளியை அமைச்​சர் மகேஸ் திறந்து வைத்​தார். அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்​டியது எனது கடமை. அந்த விதத்​தில், சட்​டமன்ற உறுப்​பினர் என்ற வகை​யிலும் அமைச்​சர் என்ற முறை​யிலும் வீர​வாளை பரிசளித்​தேன். மற்​றபடி வேறு எந்த காரண​மும் இல்​லை” என்​றார்.

துணை மேயர் உள்பட உங்​களது ஆதர​வாளர்​கள் யாருமே விழாவுக்கு வரவில்​லையே என அமைச்​சர் அன்​பில் மகேஸிடம் கேட்​டதற்கு “மாநகரச் செய​லா​ளர் மதி​வாணன் பெயர் மட்​டும் அழைப்​பிதழில் இருந்​த​தால் அவர் மட்​டும் விழா​வில் பங்​கேற்​றார். துணை மேயர் திவ்யா பங்​கேற்​காதது குறித்து எனக்கு தெரிய​வில்​லை. விழா​விற்கு வரவேண்​டாம் என்று யாரை​யும் யாரும் தடுக்​க​வில்​லை. தெற்கு மாவட்​டத்தை சேர்ந்த கவுன்​சிலர்​கள், நிர்​வாகி​கள் கலைஞர் பிறந்​த​நாள் விழாக்​களில் இருந்​த​தால் பங்​கேற்​க​வில்லை என்று நினைக்​கிறேன்” என்​றார். எது எப்​படியோ, அனைத்​தும் தெரிந்த அமைச்​சர்​களே திமுக தலை​வரின் தூக்​கத்தை கெடுக்​காமல் இருந்​தால் சரி​தான்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x