Last Updated : 06 Jun, 2025 08:06 AM

 

Published : 06 Jun 2025 08:06 AM
Last Updated : 06 Jun 2025 08:06 AM

மக்களவைத் தேர்தல் தந்த பாடம்... மீண்டும் தொகுதிக்குள் குடியேறிய அமைச்சர் நமச்சிவாயம்!

வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ என்னவோ, தொகுதிக்கு வெளியே வசித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலுக்காக சொந்தத் தொகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு மக்கள் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

​பாஜக-வைச் சேர்ந்த நமச்​சி​வா​யம் முதல்​வர் ரங்​க​சாமி​யின் அண்​ணன் மகளை திரு​மணம் செய்​தவர் என்​ப​தால், அவருக்கு மரு​மகன் முறை. 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் வில்​லிய​னூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட இவர், வெற்​றி​பெற்று அமைச்​சர​வை​யிலும் இடம்​பிடித்​தார். 2016-ல் மீண்​டும் வில்​லிய​னூரில் போட்​டி​யிட்ட இவரை முதல்​வர் வேட்​பாளர் என பிரகடனம் செய்​தது காங்​கிரஸ்.

அந்​தத் தேர்​தலிலும் நமச்​சி​வா​யம் வெற்​றி​பெற்​றாலும் அவரை முதல்​வர் நாற்​காலி​யில் அமர​விட​வில்லை காங்​கிரஸ். அவருக்​குப் பதிலாக நாராயண​சாமி முதல்​வ​ரா​னார். நமச்​சி​வா​யம் பொதுப்​பணித்​துறைக்கு அமைச்​ச​ரா​னார். முதல்​வர் பதவியை தட்​டிப்​பறித்​த​தால் காங்​கிரஸ் மீது வருத்​தத்​தில் இருந்த நமச்​சி​வா​யம், அந்த ஆட்​சி​யின் இறங்கு முகத்​தில் காங்​கிரஸுக்கு குட் பை சொல்​லி​விட்டு பாஜக-​வில் இணைந்​தார்.

2021 தேர்​தலில் வில்​லிய​னூருக்​குப் பதிலாக மண்​ணாடிப்​பட்டு தொகு​தி​யில் பாஜக வேட்​பாள​ராக போட்​டி​யிட்​டார் நமச்​சி​வா​யம். அதற்​காக அந்​தத் தொகு​திக்கு உட்​பட்ட திருக்​க​னூர் பகு​தி​யில் குடியேறிய​வர், அந்​தத் தேர்​தலில் 2,750 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் திமுக-வை வீழ்த்தி எம்​எல்ஏ ஆனார். தேர்​தலுக்​குப் பின் அமைந்த என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி அமைச்​சர​வை​யில் உள்​துறைக்கு அமைச்​ச​ரா​னார் முதல்​வரின் மரு​மக​னான நமச்​சி​வா​யம். தேர்​தல் வெற்​றிக்​குப் பிறகு திருக்​க​னூரில் இருந்து தனது ஜாகையை கொடாத்​தூருக்கு மாற்​றிய நமச்​சி​வா​யம், அடுத்த சில மாதங்​களில் அங்​கிருந்து வில்​லிய​னூர் தொகு​திக்கு உட்​பட்ட மணவெளி​யில் உள்ள தனது வீட்​டுக்கே மாறி​னார்.

மணவெளி​யில் இருந்துகொண்டு மண்​ணாடிப்​பட்டு தொகு​திக்கு மக்​கள் சேவைக்கு போக வர இருந்த நமச்​சி​வா​யத்தை தொகுதி மக்​கள் நினைத்த நேரத்​தில் சந்​திக்க முடிய​வில்லை என்ற முணு​முணுப்​புக் கிளம்​பியது. இந்த நிலை​யில், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் நமச்​சி​வா​யத்​தையே வேட்​பாள​ராக நிறுத்​தி​யது பாஜக தலை​மை. ஆனால், அமைச்​ச​ராக இருந்​தும் காங்​கிரஸ் வேட்​பாளர் வைத்​தி​லிங்​கத்​திடம் 1 லட்​சத்து 56 ஆயிரத்து 516 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி முகம் கண்​டார்.

பாஜக-​வில் தனித்த செல்​வாக்​குடன் வலம் வந்த முன்​னாள் காங்​கிரஸ்​கார​ரான நமச்​சி​வா​யத்தை இந்​தத் தோல்வி ரொம்​பவே சிந்​திக்​க​வைத்​து​விட்​டது. இந்​திரா நகர் தொகு​தியை தவிர மற்ற அனைத்து தொகு​தி​களி​லும் நமச்​சி​வா​யத்​துக்கு பெருத்த பின்​னடைவு ஏற்​பட்​டது. அதி​லும் குறிப்​பாக, அவரது சொந்​தத் தொகு​தி​யான மண்​ணாடிப்​பட்​டிலும் வைத்​தி​லிங்​கத்​தை​விட 595 வாக்​கு​கள் குறை​வாகவே பெற்​றார். நமச்​சி​வா​யம் வசித்த வி.மண​வெளி வாக்​குச் சாவடி​யிலேயே அவருக்கு 58 வாக்​கு​கள் கம்மி என்​பது கூடு​தல் அதிர்ச்​சி.

இதனால், தனது பழைய செல்​வாக்கு சரிந்​து​விட்​டதோ என பதறிய நமச்​சி​வா​யம், மீண்​டும் தனது வீட்டை மண்​ணாடிப்​பட்டு தொகு​திக்கே மாற்றி தொகுதி மக்​களுக்கு நெருக்​க​மாக இருக்க முடி​வெடுத்​தார். இதற்​காக திருக்​க​னூரில் புதி​தாக கட்​டப்​பட்ட வீட்​டில் அண்​மை​யில் கணபதி ஹோமம் நடத்தி குடியேறி​னார்.

இந்த வீட்​டுக்கு வந்த பிறகு சொந்​தத் தொகு​திக்​குள் அடிக்​கடி தென்​படும் நமச்​சி​வா​யம், தொகுதி மக்​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​குதல், கோயில் திருப்​பணி​களுக்கு நிதி​யளித்​தல், அரசின் திட்​டங்​களைத் தொடங்கி வைத்​தல் என மக்​களோடு நெருக்​க​மாகி வரு​கி​றார். மக்​கள​வைத் தேர்​தலில் தனக்கு மக்​கள் அளித்த தீர்ப்பு சட்​டமன்​றத் தேர்​தலிலும் எதிரொலித்​து​விடக்​கூ​டாது என்​ப​தற்​காக நமச்​சி​வா​யம் முன்​கூட்​டியே காரிய​மாற்ற களமிறங்கி இருப்​ப​தாக பாஜக-​காரர்​களே இப்​போது காதைக்​கடிக்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து நமச்​சி​வா​யத்​திடம் கேட்​டதற்​கு, “மண்​ணாடிப்​பட்​டில் உள்ள புதிய வீட்​டில் தான் இப்​போது வசிக்​கிறேன். 2026-ல் கட்​சித் தலை​மை​யின் அனு​ம​தி​யுடன் நிச்​ச​யம் மண்​ணாடிப்​பட்டு தொகு​தி​யில் தான் போட்​டி​யிடு​வேன். தொகு​திக்​குள் இன்​னும் தேர்​தல் பணி​களை தொடங்​க​வில்லை என்​றாலும் மக்​கள் பணி​கள் தொய்​வின்றி நடக்​கின்​றன. வரும் தேர்​தலில் பாஜக அதி​க​மான இடங்​களைப் பிடிக்​கு​மா​னால் என்னை முதல்​வ​ராக்​கு​வது குறித்து பாஜக தலைமை முடிவு செய்​யும்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x