Published : 05 Jun 2025 05:59 AM
Last Updated : 05 Jun 2025 05:59 AM

ர​யில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை: தெற்கு ரயில்வே தகவல்

சென்​னை: தமிழகம், கேரளா​வில் ரயில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை என்று தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது. தமிழகம் மற்​றும் கேரளா​வில் மொத்​தம் 12 ரயில்வே திட்​டங்​களுக்கு பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் ரூ.727 கோடியை தெற்கு ரயில்வே திரும்ப ஒப்படைத்ததாக அண்​மை​யில் தகவல் வெளி​யாகின. இதற்கு தெற்கு ரயில்வே ஏற்​கெனவே விளக்​கம் தெரி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில், தமிழகம், கேரளா​வில் ரயில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை என்று ரயில்வே அமைச்​சகம் முடிவு செய்​துள்​ள​தாக தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது.

இது குறித்​து, தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நடப்பு காலாண்​டுக்​குள் பயன்​படுத்​தப்​ப​டா​மல் இருக்​கும் சில திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நிதி, அடுத்​தடுத்த காலாண்​டு​களில் பயன்​படுத்த முயற்சி செய்​யப்​படும் என்று ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே அனுப்பிய வழக்​க​மான அதி​காரப்​பூர்வ கடிதப் பரி​மாற்​றம், சில ஊடகங்​களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்​பாக, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்​களில் தெற்கு ரயில்​வே​யின் திட்​டங்​களுக்கு நடப்பு நிதி​யாண்​டில் பல்​வேறு ரயில்வே பணி​களுக்​காக, ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை என்று ரயில்வே அமைச்​சகம் முடிவு செய்து தெரி​வித்​துள்​ளது. மேலும், 2025-26 நிதி​யாண்​டிற்​கான அமைச்​சகத்​தால் அந்​தந்த திட்​டங்​களுக்கு வழங்​கப்​பட்ட அசல் பட்​ஜெட் ஒதுக்​கீடு, நிதி​யின்​படி தெற்கு ரயில்வே தமிழகம் மற்​றும் கேரள மாநிலங்​களில் பல்​வேறு திட்​டங்​களைத் திட்​ட​மிட்டு செயல்​படுத்த வேண்​டும் என்​றும் தெளிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x