Published : 05 Jun 2025 04:12 AM
Last Updated : 05 Jun 2025 04:12 AM

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை மனுத்தாக்கல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. | படம்: ம.பிரபு |

சென்னை: ​மாநிலங்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் திமுக, அதி​முக வேட்​பாளர்​கள் நாளை (ஜூன் 6-ம் தேதி) வேட்பு மனுக்​களை தாக்​கல் செய்​கின்​றனர். தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது அப்​துல்​லா, அன்​புமணி மற்​றும் சந்​திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் வரும் ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்​து, காலி​யாக உள்ள 6 இடங்​களுக்​கான தேர்​தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இந்த இடங்​களுக்​கான வேட்பு மனுத்​தாக்​கலுக்​காக, தமிழக சட்​டப்​பேரவை செயலக கூடு​தல் செயலர் சுப்​பிரமணி​யன் தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யாக​வும், பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் உதவி தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் பலம் அடிப்​படை​யில் 6 இடங்​களில் 4 திமுக​வுக்​கும், இரண்டு அதி​முக​வுக்​கும் கிடைக்​கும். அதன் அடிப்​படை​யில், திமுக சார்​பில் 4 இடங்​களுக்கு மக்​கள் நீதி மய்​யம் கட்​சித்தலை​வர் கமல்​ஹாசன், பி.​வில்​சன், கவிஞர் சல்​மா, சிவலிங்​கம் ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதி​முக சார்​பில், தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், தேர்​தல் ஆணை​யத்​தின் அறி​விப்​புப்​படி, ஜூன் 2-ம் தேதி வேட்​புமனுத்​தாக்​கல் தொடங்​கியது. வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்​தாக்​கல் செய்​ய​லாம். முதல் நாளில், 2 சுயேச்​சைகள் மனுத்​தாக்​கல் செய்​தனர். அதன்​பின் கடந்த இரு தினங்​களாக யாரும் மனுத்​தாக்​கல் செய்​ய​வில்​லை. இந்​நிலை​யில், திமுக மற்​றும் அதி​முக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்ள வேட்​பாளர்​கள் நாளை ஜூன் 6-ம் தேதி வேட்பு மனுக்​களை தாக்​கல்​ செய்​ய உள்​ளனர்​.

பழனிசாமி ஆலோசனை: ​மாநிலங்​களவை​யில் காலி​யாக உள்ள 6 எம்​.பி. பதவி​களுக்​கான தேர்​தலில் அதி​முக சார்​பில் 2 பேர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்படி கட்​சி​யின் வழக்​கறிஞர் அணி செய​லா​ளர் ஐ.எஸ்​.இன்​பதுரை, முன்​னாள் எம்​எல்ஏ ம.தன​பால் ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதனைத் தொடர்ந்​து, அதி​முக எம்​எல்​ஏக்​கள் அனை​வரை​யும் நேற்று சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​துக்கு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அழைத்​திருந்​தார். அதன்​படி, அவர் தலை​மை​யில், துணைப் பொதுச்​செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன் ஆகியோர் முன்​னிலை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

தொடர்ந்​து, பழனி​சாமி அறி​வுறுத்​தல்​படி, வேட்​பாளர்​களின் வேட்​புமனுக்​களில் அதி​முக எம்​எல்​ஏக்​கள் அனை​வரும் கையொப்​பம் இட்​டனர். இதனை அடுத்​து, நாளை (ஜூன் 6) பகல் 12 மணியி​லிருந்து பிற்​பகல் 1:30 மணிக்​குள் அதி​முக வேட்​பாளர்​கள், வேட்பு மனுக்​களை தாக்​கல் செய்ய உள்​ளனர். அன்று அனைத்து அதி​முக எம்​எல்​ஏக்​களும் தங்​கள் அடை​யாள அட்​டை​யுடன் தலை​மைச் செயல​கம் வரு​மாறு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

பின்​னர் கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரு​வதை அனைவரும் மனதில் கொள்​ளுங்​கள். மக்​களிட​மிருந்து ஒரு​வர் மீதும் புகார் வராத அளவுக்கு உங்​கள் செயல்​பாடு​கள் இருக்க வேண்​டும். மக்​களின் புகார்​களை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுங்​கள். விரை​வில் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் செய்ய இருக்​கிறேன். ஒருசில மாதங்​களில் அதற்​கான அறி​விப்பு வரும். அப்​போது உங்​களை தொகு​தி​யில் சந்​திக்​கிறேன்.

மாவட்ட செய​லா​ளர்​களு​டன் இணைந்​து, வாக்​குச்​சாவடி கிளை பொறுப்​பாளர் நியமனத்​தில் எம்​எல்​ஏக்​களும் தங்​கள் பங்​களிப்பை செலுத்த வேண்​டும். இப்​போது பாஜக​வுடன் கூட்​டணி உறு​தி​யாகி இருக்​கிறது. மேலும் பல கட்​சிகள் கூட்​ட​ணி​யில் இணைய உள்​ளன. தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பலம் வாய்ந்த கூட்​டணி அமை​யும். 2026 தேர்​தலில் ஆட்​சியை பிடிக்​கும். அதனால் எம்​எல்​ஏக்​கள் அனை​வரும், அவர​வர் தொகு​தி​யில் தேர்​தல் பணி​களை இப்​போதே தொடங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ பேசி​ய​தாக தகவல்​ வெளி​யாகி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x