Published : 04 Jun 2025 04:39 AM
Last Updated : 04 Jun 2025 04:39 AM

உள்ளாட்சிகளில்​ ​மாற்றுத்​ ​திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்​ அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர்​ ஒப்புதல்​

சென்​னை: தமிழகத்​தில் ஊரக மற்​றும் நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி ஒப்​புதல் அளித்​துள்​ளார். இதன்​மூலம், மாற்​றுத் திற​னாளி பிர​தி​நி​தி​கள் விரை​வில் நியமிக்​கப்பட உள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வை​யின் பட்​ஜெட் கூட்​டம் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடை​பெற்​றது. இதில் துறை​வாரி​யான மானிய கோரிக்கை மீதான விவாதங்​கள் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்​.29-ம் வரை நடை​பெற்​றது.

இந்த கால​கட்​டத்​தில், நிதி மசோ​தாக்​கள், கலைஞர் பல்​கலைக்​கழகம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களில் பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கு​வது, கடன் நிறு​வனங்​களின் வலுக்​கட்​டாய நடவடிக்​கை​களில் இருந்து பொது​மக்​களை பாது​காப்​பது உட்பட 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநர் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டன.

இதில், தமிழக அரசின் 4 நிதி மசோ​தாக்​களுக்கு கடந்த மே 17-ம் தேதி ஆளுநர் ஒப்​புதல் அளித்​தார். மேலும் 14 மசோ​தாக்​கள் நிலு​வை​யில் இருந்​தன. இந்​நிலை​யில், கடந்த ஏப்​.16-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தாக்​கல் செய்த, நகர்ப்​புற, ஊரக உள்​ளாட்​சிகளில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி தற்​போது ஒப்​புதல் அளித்​துள்​ளார். அரசிதழில் இந்த சட்​டம் வெளி​யிடப்​படு​வதன் மூலம் அமலுக்கு வரு​கிறது.

இந்த சட்​டத்​தின் மூலம், மாற்​றுத் திற​னாளி​களில் 650 பேர் நகர்ப்​புற உள்​ளாட்​சிகளி​லும், 12,913 பேர் கிராமப் பஞ்​சா​யத்​துகளி​லும், 388 பேர் ஊராட்சி ஒன்​றி​யங்​களி​லும், மாவட்ட ஊராட்​சிகளில் 37 பேரும் நியமிக்​கப்பட உள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆளுநருக்கு பயம்: இதனிடையே மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்த தினத்தை ஒட்​டி, சென்னை அண்ணா அறி​வால​யத்​தில், அவரது படத்​துக்கு முதல்​வர் மு.க. ஸ்டா​லின் மரி​யாதை செலுத்​தி​னார். அப்​போது. செய்​தி​யாளர்​கள் கருணாநிதி பிறந்​த​நாள் செய்தி மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களில் பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்​தது குறித்து கேள்வி எழுப்​பினர்.

இதற்கு முதல்​வர் பதிலளித்​த​தாவது: அரசின் சாதனை​களை விளக்​கிச்​சொல்​லும் வகை​யில் தொடர்ந்து பிரச்​சா​ரம் நடை​பெற உள்​ளது. உள்​ளாட்​சிகளில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் மசோ​தாவுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்​திருப்​பது எதிர்​பார்த்​தது​தான். அது ஒன்​றும் பெரிய பிரச்​சினை இல்​லை. சட்​டப் பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்றி அனுப்​பி​யுள்​ளோம். அதற்கு அவர் ஒப்​புதல் அளித்​துள்​ளார். ஒரு​வேளை நாம் நீதி​மன்​றம் சென்​று​விடு​வோமோ என பயந்து அவர் ஒப்​புதல் அளித்​திருக்​கலாம். வேறு ஒன்​றும் இல்​லை. இவ்​வாறு அவர் பதிலளித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x